Friday 9 December 2011

ரஜினியை சந்திக்க போகும் அந்த ஒரு ரசிகர்

- 0 comments
 
 
 
 
 
மறு ஜென்மம் எடுத்து வந்திருக்கிறார் ரஜினி. இந்த மறுபிறவிக்கு காரணம் மருத்துவம்தான் என்றாலும் ரசிகர்களின் ஓயாத பிரார்த்தனையும் அன்பும் கூட இன்னொரு காரணம் என்று நம்புகிறார் ரஜினி.
 
அவர் எப்போது ரசிகர்களை சந்திப்பார்? மொத்தமாக அனைவரையும் வரவழைத்து சந்திப்பாரா, அல்லது மாவட்ட பொறுப்பாளர்களுக்கு மட்டும்தான் அந்த அதிர்ஷ்டம் இருக்கிறதா என்றெல்லாம் குழம்பிப் போயிருக்கிறார்கள் அதே ரசிகர்கள். இந்த நிலையில் முன்னணி வார ஏடு ஒன்று ரஜினி ஸ்பெஷல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
 
இதில் ரஜினி குறித்த ஏராளமான விஷயங்கள் வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமாக அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது இங்கு அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்ட ரசிகர்களை பற்றியும், அலகு காவடி இழுத்தவர்கள் பற்றியும் கூட அதில் தகவல்கள் அடங்கியிருக்கிறது.
 
இதையெல்லாம் வரி விடாமல் படித்து ஆனந்த கண்ணீர் வடித்தாராம் ரஜினி. இந்த அலகு காவடி இழுத்தவருக்கு மட்டும் இப்போது அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. எங்கிருந்தாலும் அவரை நான் பார்க்கணும். அழைச்சிட்டு வாங்க என்று பணித்திருக்கிறாராம் தனது உதவியாளர்களிடம்.



[Continue reading...]

ராஜபாட்டை பாடல்கள் ஒரு பார்வை;

- 0 comments
 
 
 
விக்ரம் தீக்ஷா நடிப்பில் சுசிந்திரன் இயக்கத்தில், யுவன் இசையில், யுகபாரதி வரிகளில் ராஜ பாட்டை படத்தின் பாடல்களை பற்றிய சிறு தொகுப்பு இங்கே,
 
* பொடி பையன் போலவே மனம் இன்று துள்ளுதே - இந்த பாடலை ஹரிசரண் பாடியுள்ளார், சென்னை பீச்சில் படமாக்கி உள்ளனர்

* லட்டு லட்டு ரெண்டு லட்டு சேர்ந்து கிடைச்சா லக்கு லக்கு -இந்த பாடல் இத்தாலியில் படமாக்கி உள்ளனர் ,ஸ்ரேயா ,ரீமாவுடன் விக்ரம் அதிரடி ஆட்டம் போட்டுள்ளார், இந்த பாடலை விக்ரம், சுசித்ரா, பிரியதர்ஷினி பாடி உள்ளனர் ,

* வில்லாதி வில்லன்கள் எல்லாரும் என்னை விலை பேச வந்தார்கள் -இந்த பாடலை 1985 களில் உள்ள கிளப் மாடலை, ஏவிஎம் இல் செட் போட்டு படமாக்கி உள்ளனர் , தெலுகு நடிகை சலோனி விக்ரமுடன் ஆட்டம் போட்டு அசத்தி உள்ளாராம் ,இந்த பாடலில் மட்டும் விக்ரம் 7 கெட்டப்புகளில் வராராம், மனோ, மாலதி பாடி உள்ளனர்,

* பனியே பனிபூவே மனம் ஏனோ பறக்குதே தலை கால் புரியாமல் உன்னை பார்த்து சாமி ஆடுதே -இந்த பாடல் இத்தாலியில் படமாக்கி வந்துள்ளனர். ஜாவத் அலி .ரேணு பாடி உள்ளனர், விக்ரம் தீக்ஷா டூயட் பாட்டு இது, நான் மகான் அல்ல படத்தில் இடம் பெற்ற இறகை போலே என்ற பாடல் வரிசையில் பனித்துளி பாட்டு இருக்கும் என்கிறார் இயக்குனர்,
 
ராஜ பாட்டை படம் நில அபகரிப்பு பிரச்னையை சொல்ல போகும் படமாகவும் ,தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே உள்ள உறவையும் உணர்வையும்
எல்லாம் கலந்த கலவையாக்கி கொடுக்க முயற்சி செய்துள்ளார் சுசி , டிசம்பர் 23ம் தேதி படம் திரைக்கு வர உள்ளது,
 

 


[Continue reading...]

அன்பின் அருமை யா���ுக்குத் தெரியும்?!

- 0 comments


முன்னொரு காலத்தில் ஒரு தீவில் எல்லா மனித உணர்ச்சிகளும் வாழ்ந்து வந்தன.
--மகிழ்ச்சி,வருத்தம்,அறிவு,அன்பு போன்ற அனைத்து உணர்ச்சிகளும்.

ஒரு நாள் அவைகளுக்குத் தெரிய வந்தது அந்தத் தீவு கடலில் மூழ்கப்  போகிறதென்று.

உடனே எல்லாம் படகு கட்டித் தீவை விட்டுப் புறப்பட்டன-அன்பைத்தவிர.

கடைசி நொடி வரை அன்பு அங்கேயே இருக்கத் தீர்மானித்தது.

அந்தத் தீவு கிட்டத்தட்ட மூழ்கி விட்ட  நிலையில்,அன்பும் வெளியேறத் தீர்மானித்தது.

அப்போது பணம் ஒரு அழகிய படகில் சென்று கொண்டிருந்தது. அன்பு அதனிடம் உதவி கேட்டது.

"என் படகில் தங்கம்,வெள்ளி,வைரம் எல்லாம் இருக்கிறது.உனக்கு இடமில்லை" என்று சொல்லிச் சென்று விட்டது.

அந்தப்பக்கம் சென்று கொண்டிருந்த வீண் பெருமையை உதவி கேட்டது அன்பு.அது சொன்னது"நீ முழுவதும் நனைந்து போயிருக்கிறாய்.என் படகை நாசப்படுத்தி விடுவாய்"

வருத்தத்தைக் கேட்க அது சொன்னது"எனக்கு அமைதி வேண்டும் .நான் தனியாக இருக்க விரும்புகிறேன்"

மகிழ்ச்சி அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது,அன்பு கேட்டதே அதன் காதில் விழவில்லை.

அப்போது ஒரு குரல் கேட்டது "வந்து என் படகில் ஏறிக்கொள்"

ஒரு வயதானவரும் உடன் வேறு சில வயதானவர்களும் படகில் இருந்தனர்.
அன்பு படகில் ஏறிக்கொண்டது.

படகு நல்ல தரையில் நின்றது.

அன்பை அழைத்த அந்த உணர்வு நிற்காமல் போய்விட்டது.

அன்பு அருகில் இருந்த அறிவு என்னும்முதியவரைக் கேட்டது "அது யார்?"

"காலம்" பதில் வந்தது.

"காலம் ஏன் எனக்கு உதவி செய்தது?"

அறிவு ஒரு அறிவார்ந்த பார்வையுடன் சொன்னது "ஏனென்றால், காலத்துக்குத்தான் தெரியும்,அன்பு எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்று"



http://dinasarinews.blogspot.com



  • http://sex-story7.blogspot.com

  • [Continue reading...]

    'மம்பட்டியான்'க்கு தடை கோரும் மம்பட்டியான் மகன்!

    - 0 comments
     
     
     
    'மம்பட்டியான்' என்ற சினிமா படத்தை வெளியிட தடைக்கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் மம்பட்டியான் மகன் நல்லப்பன்.
     
    சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில், சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த நல்லப்பன் தாக்கல் செய்த மனுவில், "என் தந்தை மம்பட்டியான் என்ற அய்யாத்துரையை முன்விரோதம் காரணமாக கருப்பன் என்பவர் 1964-ம் ஆண்டும் கொலை செய்தார். ஆனால் போலீசார்தான் என் தந்தை மம்பட்டியானை பற்றி தவறான தகவல்களை வெளியிட்டனர். தான் சார்ந்த சமுதாயத்துக்காக பாடுபட்டவர் அவர்.
     
    தமிழக அரசு என் தந்தையை பிடிக்க மலபார் போலீஸ் உட்பட பல தனிப்படையை அமைத்தது. என் தந்தை மம்பட்டியான், தமிழகத்தில் பிரபலமானவர். லட்சக்கணக்கான மலைசாதியினராலும், சமுதாயத்தில் கீழ்மட்டத்தில் உள்ளவர்களாலும் தலைவனாக போற்றப்படுபவர் அவர்.
     
    இந்த நிலையில் என் தந்தையை பற்றிய உண்மைக்கு புறமான தகவலுடன் லட்சுமி சாந்தி மூவிஸ் உரிமையாளர் தியாகராஜன் சினிமா எடுப்பதாக தெரிகிறது. என் தந்தையை பற்றி தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் அது ஏற்படுத்திவிடும்.
     
    இதனால் என்னையும், எங்களது குடும்பத்தினரையும் இந்த சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் சூழ்நிலை ஏற்படும். எந்த தவறும் செய்யாத நானும், என் குடும்பத்தாரும் பாதிக்கப்படக்கூடும். எங்கள் சொத்துக்களை பிறர் சேதமடையச் செய்யக்கூடும்.
     
    'மம்பட்டியான்' சினிமாவை வியாபார நோக்கத்துடன் தியாகராஜன் எடுத்து வருகிறார். இந்தப் படம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. அவர் எங்களிடம் எழுத்துப்பூர்வமான அனுமதியை பெறாமலேயே எனது தந்தையின் பெயரில் அவரைப் பற்றி படம் எடுத்து வருகிறார்.
     
    எனவே தியாகராஜன் தயாரிப்பில், நடிகர் பிரசாந்த் நடிக்கும் `மம்பட்டியான்' படத்தை வெளியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும். என் தந்தை மம்பட்டியானின் பெயர் அல்லது அவரது வாழ்க்கை பற்றிய எந்த அடையாளங்களையும் வைத்துக்கொண்டு அந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.
     
    இந்த மனு சென்னை 8-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி வினோபா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக 12-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி தியாகராஜனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.



    [Continue reading...]

    கிரிக்கெட்டில் சச்சின் கடவுள்: ஆனால் சேவாக்... ரஜினிகாந்த்!!

    - 0 comments
     
     
    வட இந்திய ஊடகங்களில் இப்போதைய லேட்டஸ்ட் 'ரஜினி கமெண்ட்' இதுதான்.
     
    மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஷேவாக் வெளுத்துக் கட்டிய 219 ரன்கள்தான் இந்த கமெண்டுக்குக் காரணம்.
     
    இந்த இரட்டை சதத்தின் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் உலகிலேயே அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையை ஷேவாக் பெறுகிறார். 40ஆண்டுகால ஒரு நாள் போட்டி வரலாற்றில் இதுவே அதிகபட்ச தனிமனித ஸ்கோர். 147 பந்துகளில் 25 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என ரன் மழைதான், இந்தூர் ஸ்டேடியத்தில்.
     
    அதேநேரம், அதிகபட்சம் ஸ்கோர் (418 ரன்கள்) செய்த அணி என்ற பெருமையும் இந்திய அணிக்கு கிட்டியுள்ளது.
     
    தனது இந்த சாதனை மூலம் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் ஷேவாக்.
     
    ஒருநாள் போட்டியில் மட்டுமல்ல... டெஸ்ட் போட்டியிலும் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற பெருமை ஷேவாக்குக்குதான். 319 ரன்கள். (உலக அளவில் இந்த சாதனை லாராவுக்கு மட்டுமே. )
     
    இதன் மூலம் டெண்டுல்கரை விட அதிகம் பேசப்படும் கிரிக்கெட் வீரராக ஷேவாக் மாறியுள்ளார்.
     
    வட இந்திய மீடியாவில், 'கிரிக்கெட் உலகில் சச்சின் கடவுள் என்றால்... ஷேவாக் தி ரஜினிகாந்த்' என எழுத ஆரம்பித்துள்ளனர்.
     
    இந்த கமெண்ட் குறித்து ஒரு கிரிக்கெட் விமர்சகர் கூறுகையில், டெஸ்ட், ஒருநாள் போட்டிகளின் அதிகபட்ச சாதனைகளை வைத்திருப்பவர் சச்சின் டெண்டுல்கர்தான். ஒரே ஒரு சதம் அடித்துவிட்டால் 100 சதங்களை பூர்த்தி செய்துவிடுவார். ஆனால் இதற்காக அவர் 17 போட்டிகளை வீணடித்திருக்கிறார். அந்த கோபத்தில் இப்படி கமெண்ட் அடித்துள்ளனர் என்று நினைக்கிறேன்.
     
    ஆனால் அடுத்த போட்டியிலேயே தனது 100வது சதத்தை சச்சின் பூர்த்தி செய்துவிட்டால், கடவுளுக்கு மீண்டும் மவுசு வந்துவிடும்," என்றார்.
     
    ஒரு கிரிக்கெட் ரசிகர் இதுபற்றிக் கூறுகையில், "இந்த சாதனையெல்லாம் கிடக்கட்டும்.... இந்தியாவில் வெளுத்துக் கட்டுவதா பெரிய விஷயம். வெளிநாடுகளில் சாதனை என்றல்ல... குறைந்தபட்ச வெற்றியையாவது நமது அணி எட்டுகிறதா... இங்கிலாந்தில் பட்ட உதை கொஞ்சமா... இதோ அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறார்கள். அங்கே காட்டட்டும் இந்த வீரத்தை!" என்று கொந்தளித்துள்ளார்.
     
    நூத்துல ஒரு வார்த்தை!



    [Continue reading...]

    பல சாதனைகளை படைத்து மேற்கு இந்தியத் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா

    - 0 comments
     
     
    மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஷேவாக் விளாசிய 219 ரன்களுடன், அந்த அணியை 153 ரன்களில் வீழ்த்தியதோடு, பல சாதனைகளையும் படைத்து ஒரு நாள் தொடரை வென்றுள்ளது இந்தியா.
     
    இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இதில் 2 அணிகளுக்கும் இடையிலான 4வது ஒருநாள் போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. போட்டியின் 'டாஸ்' வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்து அதிரடியாக ரன்களை குவித்தனர்.
     
    துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷேவாக், கம்பிர் ஜோடி துவக்கம் முதலே அதிரடியாக ரன்களை குவித்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களை துவஷம் செய்த ஷேவாக் 69 பந்துகளில் சதமடித்தார். இதன்மூலம் ஷேவாக் கேப்டனாக இருந்து முதல் சதமும், ஒருநாள் அரங்கில் 28வது சதத்தையும் கடந்தார்.
     
    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 176 ரன்கள் சேர்த்த போது, காம்பிர் (67) ரன்-அவுட்டானார். அதன்பிறகு வந்த ரெய்னா, ஷேவாக் உடன் ஜோடி சேர்ந்து அரைசதம் கடந்து 55 ரன்கள் எடுத்த போது ரன் அவுட்டானார். விக்கெட்கள் வீழந்தாலும் ஷேவாக் தொடர்ந்து களத்தில் இருந்ததால், ரன் ரேட் 8 ரன்களை குறையாமல் இருந்தது.
     
    பின்னர் வந்த ஜடேஜா 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். மறுபக்கம் ஷேவாக் 170 ரன்கள் எடுத்த போது கொடுத்த எளிய கேட்சை சம்மி கோட்டை விட்டார். அதனால் உஷாரான ஷேவாக் அதிரடி ரன் குவிப்பை தொடர்ந்தார்.
     
    7 சிக்ஸ், 25 பவுண்டரிகள் அடித்த ஷேவாக் ஒருநாள் அரங்கில் இரட்டை சதம் கடந்த 2 வீரராக சாதனை படைத்தார். அத்தோடு நில்லாமல் 219 ரன்களைத் தொட்டு புதிய உலக சாதனையையும் படைத்தார்.
     
    அவர் 206 ரன்களை கடந்த போது, ஒருநாள் அரங்கில் 8,000 ரன்களை கடந்த 24வது வீரரானார். மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஷேவாக் 6வது இடத்துக்கு முன்னேறினார். ஷேவாக் 219 ரன்களில் ஆட்டமிழந்தார்.
     
    நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட்களை இழந்து 418 ரன்களை எடுத்தது. இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 400 ரன்களை 4 முறை கடந்த அணி மற்றும் அதிகபட்ச ரன்கள் எடுத்த அணி உள்ளிட்ட சாதனைகளை இந்திய அணி படைத்தது.
     
    பின்னர் ஆடவந்த மேற்குஇந்தியத் தீவுகள் அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 265 ரன்களில் வீழ்ந்தது. அந்த அணியின் ராம்தின் மட்டுமே சிறப்பாக ஆடி 96 ரன்களைக் குவித்தார்.
     
    இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ராகுல் சர்மா, ஜடேஜா உள்ளிட்டோர் தலா 3 விக்கெட்களை எடுத்தனர்.
     
    இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதிரடியாக இரட்டை சதமடித்து இந்திய வெற்றிக்கு வித்திட்ட ஷேவாக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
     
    சாதனை மழை:
     
    டெஸ்ட் போட்டியில் டிரிபிள் சதமும், ஒருநாள் போட்டியில் இரட்டை சதமும் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ஷேவாக் படைத்துள்ளார். இவர் டெஸ்ட் போட்டியில் எடுத்த 319 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
     
    இது குறித்து அதிரடி வீரர் ஷேவாக் கூறியதாவது,
     
    'இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைப்பேன் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. சமீபகாலமாக சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த போதும், எனது பேட்டிங் முறையை நான் மாற்றிக் கொள்ளவில்லை. நான் கொடுத்த எளிமையான கேட்சை, சம்மி கோட்டைவிட்டதை பார்த்த போதே கடவுள் என் பக்கம் இருப்பதாக உணர்ந்தேன், என்றார்.



    [Continue reading...]

    Why This Kolaveri? - ஆபாயில் (���ப்படியே சாப்பிடுங்க)

    - 0 comments





    புது டெக்னாலஜிகள் எல்லாம் நமக்கு ஒரு வகையில் பயனுள்ளதாக இருந்தாலும், மற்றொரு வகையில் நம்மை சோம்பேறிகளாகவும், முட்டாள்களாகவும் வளர்க்க போட்டி போட்டுக் கொண்டு கண்டுபிடிக்கப் படுகின்றன.

    நான் என்னுடைய மொபைல் நம்பரை தவிர யாருடைய நம்பரையும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டேன். எத்தனை நம்பர் மாத்தினாலும் கடைசி நம்பர் மட்டுமே நினைவில் இருக்கும். ஒவ்வொரு முறையும் நம்பர் மாற்றும் போதும், 

    "9898989898 இனி என் நம்பர்"

    என்று Uninor விளம்பரத்தில் வருவது போல நான் பெருமையாக பிறரிடம் சொல்லி கொள்வேன்.

    எங்கள் ரூமில் நான் நுழைந்தாலே டிவியில் சன், கே, விஜய், அல்லது ஒரு இசை சேனலோ, காமெடி சேனலோ தான் ஓடி கொண்டிருக்கும். ஒரு செய்தி சேனலுக்கோ, டிஸ்கவரி சேனலுக்கோ தப்பி தவறி கூட போக மாட்டார்கள். அப்படியே சேனல் தவறி சென்று விட்டாலும், "சாமி தெரியாம பண்ணிபுட்டோம். எங்கள மன்னிச்சுடு" என்று உடனே கடவுளிடம் மன்னிப்பு கேட்டு தோப்பு கரணம் போட்டு விடுவார்கள்.

    ஒரு மணிநேரம் செல்போன் சார்ஜ் இல்லை என்றால் நம் உடலில் ரத்தம் ஓடுவது நின்று பிணமாகி விட்டது போல ஒரு உணர்வு வந்து விடுகிறது.

    செயற்கை கருவிகள் நம் உடலில் தங்கத்தை போன்று ஒரு அங்கமாக மாறி விட்டது. நம் உடலிலே நட்டு, போல்டு, செயற்கை இதயம் எல்லாம் வைக்க ஆரம்பித்து வெகு ஆண்டுகள் ஆகிவிட்டது.  A-,AB+ போன்ற அரிய ரத்த வகை ஆபரேசன்கள் செய்வதற்கு பயன்படுத்த செயற்கை ரத்தத்தையும் கண்டுபிடித்து விட்டார்களாம்.

    இன்னும் சில வருடங்களில் உங்கள் மூளையை கழட்டி விட்டு இன்டெல் Processor வைத்து தேவையான அனைத்து சாப்ட்வேர்களையும் load செய்து விடுவார்கள். சயின்டிஸ்டுகள், சிந்திக்கும் ரோபட்களை கண்டுபிடிப்பதற்கு பதிலாக நம்மையே ரோபட்டாக மாற்றி விடவும் வாய்ப்புண்டு. ஒவ்வொரு முறை processor அல்லது சாப்ட்வேர் அப்கிரேட் (Upgrade) செய்யும் பொழுது எந்திரன் சிட்டி ரஜினி போல, ஐ ஆம் நாராயணசாமி  Upgraded வெர்சன் 2.0 என்று சொல்லி கொள்ளலாம்.



    தற்போதைய ஜெனரேசனில் பிறக்கும் குழந்தைகள் எளிதாய் டெக்னாலஜிகளை கற்றுக் கொள்கின்றனர். முன்பெல்லாம் கர்ப்பமாய் இருக்கும் பெண்கள் தங்கள் குழந்தைகள் நல்ல புத்திசாலியாய் பிறக்க நல்ல விசயங்களை பற்றி படித்துக் கொண்டோ, கேட்டுக் கொண்டோ இருப்பார்கள்.

    "அர்ஜூனனின் மகன் அபிமன்யூ, அவரது தாயின் வயிற்றில் இருந்தபோது அர்ஜூனன் அவரது தாய் சுபத்ராவிற்கு சக்கரவியூகம் ஏற்பாடுகளைப் பற்றிக் கூறியபோது கேட்டதால், அவனுக்கு சக்கரவியூகம் பற்றி பகுதியளவு தெரியும். சுபத்ரா முதல் பகுதிய விளக்கங்களைக் கூறும்போது மட்டுமே விழிப்புடன் இருந்தார் அதன் பின்னர் அவர் தூங்கிவிட்டார். எனவே அபிமன்யூவிற்கு அந்த அமைப்பிற்குள் நுழைவது எவ்வாறு என்பது மட்டுமே தெரியும். ஆனால் அதிலிருந்து தான் எவ்வாறு வெளிவருவது என்பது தெரியாது. " Read full story here.


    தாய் சாப்பிடும் உணவு தன் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு கடத்தப்படுவது போல அவர்களுடைய செயல்பாடுகளின் நுணுக்கங்களும் கடத்தப் படலாம்.

    என் அக்கா கர்ப்பமாய் இருந்த நேரத்தில், சீனாவில் இருக்கும் என் மாமாவுடன் தினமும் போனிலும் Skype சாட்டிலும் பேசிக்கொண்டிருப்பாள். என் அக்கா மகன் நகுலன் அவனுக்கு இரண்டு, இரண்டரை வயதான போதே, அவனாகவே இந்தியாவில் இருக்கும் எனக்கு மொபைல் மூலம் போன் செய்து விடுவான். கம்ப்யுட்டரை ஆன் செய்து உள்ளே சென்று தனக்கு பிடித்த பாடல்களை கேட்பது முதல், தன் அப்பாவுக்கு ஆன்லைன் மூலம் போன் செய்வது முதல் எல்லாம் அத்துபடி.

    இத்தனைக்கும் அவனுக்கு ABCD கொஞ்சம் கொஞ்சம் சொல்ல தெரிந்தாலும், எழுத்தை recognize பண்ண சுத்தமாக தெரியாது. தமிழில் பேசச் சொன்னால் வேற்று கிரகவாசி போல ஏதோ உளறுவான். அவனை கேமராவில் போட்டோ எடுக்கும் போதெல்லாம் ஒன், டூ, த்ரீ cheese என்று அழகாய் சீன மொழியில் சொல்லுவான். இரண்டு வருடம் சீனாவில் இருந்ததால் அங்கிருக்கும் சீன மக்களோடு பேசி பேசி என் அக்காவை விட அதிகம் சீன மொழியில் புலமை பெற்று விட்டான்.

    சிலநாள் நான் ஆபிசில் வேலை செய்து கொண்டிருக்கும் போது டொய்ங் டொய்ங்கென்று சத்தத்துடன், ஜிமெயில் சாட் பாக்ஸில் மெசேஜ் Blink ஆகும். 

    sfsdflksjdslkfsdfddddddd[]dddddddddddddsdgnldfgdfgggggg
    3333333333sdfsnfgoiurtnyrtyrty34343446343erereeyeeertekrt;erke;
    erbmvmbpmmmmmmmmmmmmerttttttttttttttdvfghgdnoiyldfkds kiiiiiiiiiiiiiiiiiidfgdfdnflknkljoooooooooooooefdsfgdfgdfdfsdfsd[]w
    4r34534sdf678979 /*dfgsgdfhdghdsghdfsgsdfgrt65ergefgdfgdfg

    அவன் அனுப்பிய இந்த Encrypted மெசேஜ்ஜை யாராவது Decrypt பண்ணி கொடுத்தால் நல்லது. டெக்னிகல் ப்ளாக் வைத்திருக்கும் ப்ளாகர்களுக்கு கடுமையான சவால்.

    அவனைப் பற்றி நான் எழுதிய ஒரு கவிதை,

    நகுலன் என்றொரு அழகன்.

    He is a Little Mark Zuckerberg.

    மார்க் ஜுகர்பெர்க்கின் வாழ்கையை பற்றிய திரைப் படமான The Social Network படம் போரடிக்காமல் விறுவிறுப்பாகவே சென்றது. அந்த படம் பார்த்தப் பிறகு எனக்கு பேஸ்புக் தளத்தை Hack செய்யும் ஆசை வந்தது. சைபர் க்ரைமில் மாட்டிக் கொள்வேன் என்று பயந்து விட்டு விட்டேன். ;-)

    -------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*-------*

    மூன்று வருடங்கள் வேளச்சேரியின் சகதியில் படுத்து உருண்டு விட்டு (வசித்துவிட்டு), பரங்கிமலை பகுதியில் என் நண்பன் ரூமுக்கு மாறியுள்ளேன். வேளச்சேரியை விட்டு வரும் போது பெரும் நிம்மதி ஏற்படுகிறது. சுற்றி சுற்றி ஏரிகள் அதிகம் இருந்தாலும் ரொம்பவும் வறட்சியான ஏரியா. ஏரி இருப்பதால் வேளச்சேரி என்று பெயர் வந்ததா? என்று தெரியவில்லை.

    மழைகாலத்தில் மட்டும் வேளச்சேரி சாக்கடையால் நிரம்பி வழியும். பொதுவாக வெள்ளப் பகுதிகளை பெரிய பூட்ஸ் போட்டு கொண்டு பார்வை இட  வரும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வேளச்சேரியில் மட்டும் தங்கள் பொற்பாதங்களை வைப்பதில்லை.

    நாம் பேருந்தில் செல்லும் போது சாக்கடையோரம் வசிக்கும் குடியை வாழ் மக்களை பார்த்து பரிதாப்பட்டு விட்டு கடந்து செல்லுவோம். ஆனால் மழைக்காலம் வந்து விட்டால், நம்மை பார்த்து நாமே பரிதாப்பட்டுக் கொள்ள வேண்டும்.

    மடிப்பாக்கம் பக்கம் வீடு பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் மடிப்பாக்கம் ரோட்டின் நடுவில் நின்று வாலை நீட்டி, பைக்கில் செல்லும் நம்மிடம்  லிப்ட் கேட்கும் மாடுகளை நினைத்ததும் அந்த எண்ணம் கைவிடப் பட்டது. மடிப்பாக்கத்திற்கு மாடுப்பாக்கம் என்றே பெயர் வைத்திருக்கலாம். ஜெயலலிதாவிடம் சொன்னால் ஒரு Flow வில் அதையும் மாற்றி இருப்பார்.

    பரங்கி மலையில் உள்ள சர்ச்சில் இருந்தோ, மசூதியில் இருந்தோ எதோ ஒரு பாட்டு பாடிக் கொண்டிருக்கும். நான் கூடிய சீக்கிரம் மதம் மாற வாய்ப்புண்டு.

    ஹாலிவுட் படங்களில் மூச்சு விடாமல் ஆங்கிலத்தில் பேசுவதை கேட்க்கையில் நம் காதில் புகை வரும். அதேபோல் புது ரூமில் உள்ள ஒரு நண்பன் தமிழை மூச்சு விடாமல் பேசுகிறான். நான்கைந்து தடவை திரும்ப திரும்ப கேட்க வேண்டி உள்ளது. தமிழ் மொழி மற்றும் அதன் காலாச்சாரம் மீது காதல் கொண்டு தமிழை கற்க விரும்பும் வெளிநாட்டு பெண் எவளாவது இவன் பேசுவதை கேட்டால், Why This Kolaveri? என்று கேட்டுவிட்டு தன் நாட்டிற்கு அடுத்த பிளைட் பிடித்து விடுவாள்.

    தென் இந்தியாவின் புகழ் மிக்க திரையரங்கான பரங்கிமலை ஜோதியை இன்னும் சென்று பார்வையிடவில்லை. பிட்டுக்கு பெயர்போன இத்திரையரங்கில், பிட்டு துணி அணிந்து நடிப்பதற்கு பெயர்போன ஷகிலா ஆண்டியின் படங்கள் போடுவது எப்போதோ நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது ஆபாசம் இல்லாத (??) சுத்தமான தமிழ் படங்கள் மட்டுமே திரையிடப் படுகின்றன.

    அதனால் தற்போது ஐயப்ப சாமி பக்தர்கள் சபரி மலை ஜோதியை கண்டு பக்தியில் பரவசம் அடைவது போல, நான் இந்த பரங்கிமலை ஜோதிக்கு சென்று பரவசம் அடையமுடியாதது மிகப் பெரிய துரதிஷ்டம்.




    தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர்..
    தமிழ்நாட்டின் ஜான்சி ராணி..
    தமிழ்நாட்டின் விடிவெள்ளி..
    தமிழ்நாட்டின் கவிமங்கை..
    தமிழ்நாட்டின் தியாகச் செம்மல்

    ஸ்ஸ்... மூச்சு வாங்குது.

    திருமதி. கனிமொழி அவர்கள் திகாரில் களி தின்னதை மறக்கடிக்க சென்னை ஏர்போர்ட்டில் கொடுத்த வரவேற்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்த வரவேற்ப்பை திகாரிலிருந்து டெல்லி ஏர்போர்ட் வரை ஏன் கொடுக்கவில்லை? ஆங்கில நியூஸ் சேனல்கள் கவர் ஸ்டோரி போட்டு அலங்கரித்து விடுவார்கள்.

    ஆனால் இதே வரவேற்ப்பை கனிமொழி டெல்லி செல்லும் போது கொடுத்திருந்தால், தமிழ்நாட்டிற்கு இன்னும் நிறைய செல்வங்களை அள்ளி வந்திருப்பார்.
     
    கனிமொழி சென்னை திரும்பிய பிறகு, திமுக வின் பழைய ரத்தம் எல்லாம் எடுக்கப் பட்டு புது ரத்தம் பாய்ச்சப்பட்டதால் அதன் தலைவர்களும் உறுப்பினர்களும் தெம்பாக கட்சி வேலைகளை செய்கின்றதாக தகவல். வலையுலக தி.மு.க அனுதாபிகளும் சுறுசுறுப்பாக ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகள் போடுவதாக தெரிகிறது.



    தற்போது ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் படு மொக்கையாக இருப்பது கடும் அயர்ச்சியை தருகிறது. போராளி சூப்பராக இருக்கிறது என்ற விமர்சனத்தை படித்து விட்டு போய் பார்த்தால் சன்டிவியின் காமெடி சீரியல் போல் படு அமெச்சூர் (amateur)  தனமாய் இருக்கிறது. இசையும் பாடலும் காதுக்குள் வண்டு புகுந்த பீலிங்கை ஏற்படுத்துகின்றன.

    மந்திரப் புன்னகை கரு பழனியப்பனுக்கு அடுத்து சசிகுமார் தான் ரொம்ப புத்திசாலிதனமாய் வசனம் பேசுகிறார். இவரும் நாயகியும் சித்தப்பாவும் மகளும் போல இருப்பது படத்திற்கு பலம்.

    இந்த வருடத்தில் எனக்கு பிடித்த படங்கள். யுத்தம் செய் மற்றும் வாகை சூடவா.



    http://girls-tamil-actress.blogspot.com



  • http://tamil-joke-sms.blogspot.com

  • [Continue reading...]

    பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

    - 0 comments
     
     
    பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியரை மாவட்ட கல்வி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
     
    கடலூர் அருகே சங்கொலிக்குப்பத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் புதுவை தவளக்குப்பத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி (46) ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக சுந்தரமூர்த்தி பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டி வந்துள்ளார்.
     
    இந்த தகவல் ரகசியமாக இருந்த நிலையில், சில மாணவிகள் மூலம் கசிந்து வெளியே வந்துள்ளது. இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள், ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் செல்போனை பறித்து அதனை சோதனை செய்தனர்.
     
    அப்போது அதில் பல ஆபாச படங்கள் இருந்தது. ஆத்திரமடைந்த மாணவியரின் பெற்றோர், ஆசிரியர் சுந்தரமூர்த்தியை தாக்க முயன்றனர். அதற்குள் சுந்தரமூர்த்தி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
     
    இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மாணவிகளின் பெற்றோர் தெரிவித்தனர். இதனையடுத்து தொடக்க கல்வி அலுவலர், ஆசிரியர் சுந்தரமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.



    [Continue reading...]

    முல்லைக் கடலில் ���ாவியமான கடற்கரும்புலிகள் நினைவ�� நாள் இன்று

    - 0 comments


    08.12.1999 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக கடற்புலிகள் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகினை இடைமறித்து மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகளின் நினைவு நாள் இன்றாகும்.
    இத்தாக்குதலில் லெப்.கேணல் கார்வண்ணன், மேஜர் யாழ்வேந்தன், மேஜர் இசைக்கோன் மற்றும் கப்டன் கானவன் ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

    இக்கரும்புலி வீரர்களின் தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு கடுமையாக சேதமடைந்ததுடன் அதிலிருந்த கடற்படையினர் நால்வர் கொல்லப்பட்டும் மேலும் பலர் காயமடைந்திருந்தனர்.

    விடுதலைப் போருக்கு வலுச்சேர்க்க கொண்டுவரப்பட்ட பொறுமதி வாய்ந்த போர்க் கருவிகள் மற்றும் வெடிபெருட்கள் இக்கரும்புலி வீரர்களின் உயிர்க்கொடையினால் பத்திரமாகக் கரைசேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழீழத் தாய் மண்ணின் விடிவிற்காய் தம்மை வெடியாக்கி வித்தாகிப் போன இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கத்தை செலுத்துகின்றோம்.








    http://actressmasaala.blogspot.com



  • http://tamilsexstorys2u.blogspot.com

  • [Continue reading...]

    ஜெர்மனி, பிரான்ஸ��� தீர்வுகள் வேண்��ாம் : ஐரோப்பிய கவ���ன்சில் தலைவர் ப��திய பரிந்துரை

    - 0 comments


    ஜெர்மனியும், பிரான்சும் இணைந்து அறிவித்த புதிய தீர்வுகள் தேவைப்படாது என, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஹெர்மன் வேன் ரோம்பி தெரிவித்துள்ளார். யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடிக்கு, ஜெர்மனியும், பிரான்சும் இணைந்து புதிய தீர்வுகள் சிலவற்றை நேற்று முன்தினம் அறிவித்தன. இந்தத் தீர்வுகள், ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தத்தில் செய்யப்படும் திருத்தங்கள் மூலம் அங்கீகரிக்கப்படும்.

    அந்தத் திருத்தங்களுக்கு, ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் தங்கள் பார்லிமென்ட்டில் அங்கீகாரம் அல்லது பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இதற்கு காலம் ஆகும். ஆனால், புதிய தீர்வுகள் மார்ச் மாதத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என, இரு நாடுகளும் கால வரையறை செய்துள்ளன.

    இந்நிலையில், நேற்று ஐரோப்பிய கவுன்சிலின் அறிக்கை ஒன்றை ஐரோப்பிய பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. அதில், இரு நாடுகளின் புதிய தீர்வுகளுக்குப் பதிலாக, ரோம்பி, நிதி ஒப்பந்தம் ஒன்றை பரிந்துரைத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற நாடுகளின் பார்லிமென்ட் அங்கீகாரம் அல்லது பொது ஓட்டெடுப்பு தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், லண்டன் மாநகரின் நிதி நலன்களுக்குப் பாதுகாப்பு கிடைக்காத வரை, புதிய தீர்வுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.

    அதேபோல், யூரோ கடன் மீட்புக்காக, சர்வதேச நிதியத்திற்கு (ஐ.எம்.எப்.,) கூடுதல் நிதி எதுவும் அளிக்க முடியாது என, அமெரிக்க நிதியமைச்சர் டிமோதி கெய்த்னர் கூறியுள்ளார்.


    http://actressmasaala.blogspot.com



  • http://tamilsexstorys2u.blogspot.com

  • [Continue reading...]

    யாழில் இடம்பெற்�� மாமனிதர் ரவிராஜின் ஐந்தாவது ஆண்���ு நினைவு நிகழ்வ��!

    - 0 comments


    ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்று எடுப்பதற்காக இலங்கை நாடாளுமன்றில் முழங்கியதற்காக கோழைத்தனமாக சுட்டு வீழ்த்தப்பட்ட மாமனிதரும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜனின் 5 வது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை அனுஷ்ரிக்கப்பட்டது.

    இந்த நிகழ்வில் வன்னியில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் சுயதொழிலை ஊக்கிவிக்கும் முகமாக உதவித் தொகைகளும் வழங்கப்பட்டது.

    குறிப்பாக ஏழ்மையிலும் யுத்தத்திலும் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திருமதி பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன் , யாழ்.மாநாகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் மரிய கொறற்றி மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னர் சாவகச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மாமனிதரும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினருமான அமரர் நடராஜா ரவிராஜனின் 5 வது ஆண்டு நினைவு தினம் அரச புலனாய்வாளர்களினால் குழப்பப்பட்டது குறிப்பிடத்தகது.


    http://actressmasaala.blogspot.com



  • http://tamilsexstorys2u.blogspot.com

  • [Continue reading...]

    பென்னி குயிக் பட���்திறப்பு விழா த��்கர்பச்சான் ஆவே���ப்பேச்சு

    - 0 comments


    முல்லை பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக் படத்தை சென்னையில் திறத்து வைத்தார் இயக்குனர் தங்கர் பச்சான்.

    தென் மாவட்ட தமிழர்கள் வறட்சியில் படும் கஷ்டத்தையும் அதே நேரம் பெரியாறு அணையின் தண்ணீர் கடலில் அநியாயமாக விழுந்து வீணாவதையும் , ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பார்த்த பென்னி குயிக் என்ற வெள்ளைக்கார மனிதன் மனம் நெகிழ்ந்து, அன்றைய ஆங்கில அரசின் எதிர்ப்பையும் மீறி , இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துகளை விற்று, தென் மாவட்டத் தமிழர்களைக் கொண்டு சென்று ஏராளமான ஆபத்துகளையும் உயிரிழப்புக்களையும் சந்தித்து தனது பணம், பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பிணம் இரண்டையும் இணைத்து இழைத்துக் கட்டிய அணை முல்லைப் பெரியாறு அணை.

    பென்னி குய்க் உருவ படத்தை திறந்து வைத்த இயக்குனர் தங்கர்பச்சான் செய்தியாளர்களிடம் பேசும்போது,

    '' ஓட்டு பிச்சைக்காக அணை பலவீனமாக இருக்கிறது என்ற பொய்யான பிரச்சாரம் செய்கிறது கேரள அரசு.

    அணை பலவீனமானால் அதை சரி செய்து கொள்ளலாம், ஆனால் மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் உள்ள உறவு பவலவீனமானால் அதை சரி செய்ய முடியாது என்று கேரள அரசை எச்சரித்தார்.

    கேரளாவில் எப்படி அணைத்துக் கட்சியும் ஒன்று சேர்ந்து போராடுகிறதோ அதே போல் தமிழகத்திலும் அணைத்துக் கட்சிகளும் ஒன்று சேரர்ந்து முல்லை பெரியாறு விஷயத்தில் போராட வேண்டும்'' என்றார்.

    அவர் மேலும், முல்லை பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக் பற்றிய குறிப்புகளை பாடதிட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் கேரள அரசுக்கும் வேண்டுகோள் வைத்தார்.


    http://actressmasaala.blogspot.com



  • http://tamilsexstorys2u.blogspot.com

  • [Continue reading...]

    உலகத்தின் எதிர்��ாலம் அர்த்தமற்ற���ப் போகப்போகிறது - பான் கி மூன்

    - 0 comments


    தென்னாபிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் புவி வெப்பமடைதலைத் தடுத்தல் குறித்த கோப்-15 மாநாட்டின் தொடர்ச்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்ற ஐ.நா செயலர் பான் கி மூன் தனது பதவிக்காலத்தில் ஓர் உருப்படியான உரையை ஆற்றியுள்ளார். உலகம் என்கின்ற அழகான இந்தக் கிரகத்தின் எதிர்காலம் அர்த்தமற்றதாக போகப்போகிறது என்ற கவலையை அவர் வெளியிட்டார்.

    காலநிலை மாற்றம், வெள்ளப் பெருக்கு, துருவப் பனிமலைகள் கரைதல், கடல்மட்ட உயர்வு என்று புவிமீது நடைபெறும் தாக்கங்கள் எல்லை மீறிவிட்டன. இந்தப் புவி மீது மக்கள் வாழ்வே அர்த்தமற்று போகப்போகிறது. மக்கள் மனதில் வளர்த்துள்ள கனவுகளை எல்லாம் இந்தப் பேரழிவு குலைத்து நாசம் செய்யப்போகிறது.

    புவியின் எதிர் காலம் குறித்த நம்பிக்கை மொழிகளை ஐ.நாவால் வழங்க முடியாத அவலம் இருப்பதை அவருடைய உரை சுட்டிக்காட்டியது. அதேவேளை உலகப் பொருளாதார நெருக்கடியும் மக்களுடைய கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்ட மறுக்கவில்லை. மக்கள் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராமல் வரும் இயற்கைப் பேரழிவுகள் மனித குலத்தின் ஆனந்தமான கனவுகளையே சிதைத்துவிட வல்லது.

    புவியை அதிகமாக வெப்பமாக்கும் நாடுகள் அதனுடைய பாதிப்பை அடைவதற்கு முன்னரே ஏழை நாடுகளை அது பாதித்துவிடுகிறது. தாய்லாந்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அந்த நாட்டின் ஏழு முக்கிய பகுதிகளை வெள்ளத்தில் ஆழ்த்தியது.

    ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள பஞ்சமும் வரட்சியும் முழு உலகுக்குமே சவாலாகியுள்ளது. எனவே அழகான இந்த உலகத்தை பயன்படுத்தி ஒரு தனிமனிதன் தன்னுடைய கனவுகளை நிறைவேற்ற முடியாதளவுக்கு எங்கும் இறுக்கம் நிறைந்து கிடக்கிறது. இப்படியாக புவியை வெப்பமாக்கி, போரால் சூடாக்கி, நாசம் பண்ணும் அரசியல் தலைவர்களும், உலக அரசுகளும் உலக மக்களுக்கு வரப்பிரசாதமா இல்லை சாபக்கேடா என்ற கேள்விக்கு ஐ.நா செயலர் இப்போதுதான் சரியான பதிலை கொடுத்துள்ளார். ஆனால் வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது, அவருடைய பேச்சு சுடலை ஞானமே என்பதை மறுக்க இயலாது.


    http://actressmasaala.blogspot.com



  • http://tamilsexstorys2u.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger