Saturday 19 October 2013

ரஷியா உதவியுடன் கூடங்குளத்தில் 3, 4 வது அணு உலைகள் அமைக்க விரைவில் ஒப்பந்தம்: மன்மோகன்சிங் பேட்டி Manmohan singh says additional Nuclear reactors set up in Koodankulam agreement soon with Russia

ரஷியா உதவியுடன் கூடங்குளத்தில் 3, 4 வது அணு உலைகள் அமைக்க விரைவில் ஒப்பந்தம்: மன்மோகன்சிங் பேட்டி Manmohan singh says additional Nuclear reactors set up in Koodankulam agreement soon with Russia

புதுடெல்லி, அக்.20-

பிரதமர் மன்மோகன்சிங் இன்று ரஷியா செல்வதையொட்டி, ரஷிய பத்திரிகையாளர்களுக்கு நேற்று டெல்லியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூடங்குளம் அணு மின்நிலையத்தில், 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்காக ரஷிய நிறுவனங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விரைவில் கையெழுத்தாகும் என்று நம்புகிறேன். கடந்த 2010-ம் ஆண்டில் ரஷிய ஜனாதிபதி புதின் இந்தியா வந்தபோது ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரஷியா ஒத்துழைப்புடன் அணுமின் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த இந்தியா ஆர்வத்துடன் உள்ளது.

கூடங்குளம் முதல் அணு உலை, கடந்த ஜூலை மாதத்தில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான ஆயத்த நிலையை எட்டியது. அங்கு விரைவில் மின் உற்பத்தி தொடங்கி விடும். 2-வது அணு உலை கட்டுமானப்பணி முன்னேற்றமான கட்டத்தில் உள்ளது.

கூடங்குளத்தை அடுத்து ரஷியா உதவியுடன் அணுமின்நிலையம் தொடங்குவதற்காக மேற்கு வங்காள மாநிலம், ஹரிபூரை தேர்வு செய்து இருக்கிறோம். ஹரிபூரில் அதற்கான சாத்தியம் இல்லை என்றால் மாற்று இடம் தேர்வு செய்து வழங்கப்படும் .

இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.

...

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger