Saturday 19 October 2013

ஷிர்டி சாய்பாபா அருள் வேண்டி ஆரம்பம்…! Ajith aarambam news

ஷிர்டி சாய்பாபா அருள் வேண்டி ஆரம்பம்…!

சினிமாவில் ஓஹோவென ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் அதற்கப்புறம் நொடித்துப் போவதெல்லாம் சகஜம். இருந்தாலும் விடாமுயற்சியுடன் போராடி விட்ட இடத்தை பிடித்தவர்களும் இருக்கிறார்கள். அப்படி வெற்றிக் கோட்டுக்கு சமீபத்தில் வந்திருக்கிறார் ஏ.எம்.ரத்னம். அஜீத் நடிக்கும் ஆரம்பம் படத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு தயாரித்திருக்கும் ரத்னம், இப்படத்தை வெளிக் கொண்டு வருவதற்குள் படாதபாடு பட்டுவிடுவார் போலிருக்கிறது. எதிர்ப்புகள் நாலாபுறத்திலிருந்தும் கடன் ரூபத்தில் வர, கையில் நம்பிக்கை என்னும் பேட்டுடன் அவற்றை விரட்டியடித்துக் கொண்டிருக்கிறார் அவர்.

சனிக்கிழமை தீபாவளி என்பதால் வழக்கம் போல வெள்ளிக் கிழமையில் இந்த வருட தீபாவளிப் படங்கள் வரப்போகிறது. ஆனால் தனது அலுவலகத்திலேயே சாய்பாபாவுக்கு கோவில் கட்டியிருக்கும் ஏ.ஆர்.ரத்னம், வியாழக்கிழமை சென்ட்டிமென்ட் பார்க்கிறாராம். பாபாவுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையிலேயே ஆரம்பம் வரப்போகிறது. ஒரு நாள் கலெக்ஷனை சுளையாக முதல் நாளே அள்ளிக் கொள்ளும் சூட்சுமம்தான் இது.

எதுவாக இருந்தாலும் தடைகளை கடந்து ஏ.எம்.ரத்னம் வெல்ல வாழ்த்துக்கள்.

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger