Saturday 3 March 2012

சுளையாக இருநூறு டொலர்கள்

 

சுளையாக இருநூறு டொலர்கள்

மனைவி வீட்டில் தனியாக இருந்தாள்.

யாரோ கதவின் அழைப்பு மணியை அழுத்தினார்கள்.

அவள் கதவைத் திறந்தாள். அவள் கணவனின் நண்பன் டேவிட் வெளியே நின்றிருந்தான்.

ஹாய்! ரொம் வீட்டில் நிற்கிறாரா?

இல்லை!. கடைக்குப் போயிருக்கின்றார். உங்களுக்கு அவசரமென்றால் அவருக்காக நீங்கள் இங்கே காத்திருக்கலாம். இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவார்.

நன்றி சொல்லிவிட்டு அவன் வரவேற்பறையிலிருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டான்.

சில நிமிடங்கள் மௌனமாகக் கழிந்தன.

ஒரு முறை செருமியபடி சாரா.. என்றான் அவளது கணவனின் நண்பன்.

சாரா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

உனது மார்பகங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன…

அவள் கூச்சத்தோடு தன் இருக்கையில் நெளிந்தாள்.

நீ உன் மார்பகங்களில் ஒன்றைக் காட்டினால் 100 டாலர்கள் தருகின்றேன் என்றான் அவன்.

அட இதென்ன தொல்லையாக இருக்கின்றது. மார்பைக் காட்டட்டுமாம். 100 டாலர் தருகிறானாம்.

அவளுக்குள் சபலம் தட்டியது. ஒரு தடவை காட்டினால் என்ன நஷ்டம் வந்துவிடப்போகின்றது? 100 டாலர் இலாபந்தானே.?

ஒரு கணம் தயங்கியவள் மறு கணம் தன் மேலாடையை விலக்கி தன் மார்பகங்களில் ஒன்றைக் காட்டினாள். ஆசை தீர அவன் பார்த்துவிட்டு மேசையில் 100 டாலர் நோட்டு ஒன்றை வைத்தான். தன் மேலாடையைச் சரிசெய்து கொண்ட அவள் ஆவலோடு அந்த 100 டாலர் தாளை எடுத்துக் கொண்டாள்.

அழகே அழகுதான். ஒன்றைப் பார்த்த எனக்கு மற்றையதையும் பார்க்காவிட்டால் பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கின்றது. இரண்டாவதையும் நீங்கள் காட்டினால் இன்னொரு 100 டாலர் தருகின்றேன் என்றான் அவன்.

எந்த நரி முகத்தில் இன்று நான் விழித்தேன்? இன்னொரு 100 டாலரா?

ஆசை யாரைத்தான் விட்டது? கையில் கிடைத்த 100 டாலரின் ருசி வெட்கத்தை ஓரத்தில் தள்ள தன் மேலாடையை அகற்றி தன் இரு மார்பகங்களையும் அவனுக்குக் காட்டினாள் அவள்.

அடடா அற்புத அழகு.. அவன் கண்கள் அவள் மார்பகங்களில் மொய்த்தன. ஆசை தீரப் பார்த்து விட்டு அடுத்த 100 டாலர் தாளை அவளிடம் நீட்டினான்.

அவன் எழுந்தான். எனக்கு நேரமாகின்றது. இன்னொரு தினம் ரொம்மிடம் வருகின்றேன். கேட்டதாகச் சொல்லுங்கள்.

அவசரமாக எழுந்து அவன் போய்விட்டான். இருநூறு டாலர் சம்பாத்தியத்தில் மெய்மறந்து போயிருந்த அவள் அவசரம் அவசரமாக தன் உடைகளைச் சரிசெய்து கொண்டாள். 200 டாலரை மெல்ல தன் உட் சட்டைக்குள் செருகிக் கொண்டாள்.

பத்து நிமிடங்கள் கழித்து அவள் கணவன் வந்தான். வந்ததும் வராததுமாக

டேவிட் வந்தானா சாரா? என்று கேட்டான் ரொம்.

வந்தார். ஆனால் சில நிமிடங்கள் காத்திருந்து விட்டு பிறகு வருவதாகக் கூறி விட்டுப் போய்விட்டார் என்றாள் அவள்.

நான் கடனாகக் கொடுத்த 200 டாலர் பணத்தைக் கொண்டு வந்து உன்னிடம் கொடுப்பதாகக் கூறினான். தந்தானா ? என்று கோபத்தோடு வெடித்தான் ரொம்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger