Thursday 18 August 2011

ரஜினிகாந்த் பேச��சை கேட்க்க கண்ணீர் மல்க மன்றாடின���ன்: குமரிஅனந்தன�� பேச்சு




சென்னை வண்ணாரப்பேட்டையில் சுதந்திர தினவிழா, காமராஜர் பிறந்தநாள் விழா, பாப்பாரப்பட்டியில் சிவாவுக்கு மணிமண்டபம் அமைய உழைத்த குமரி அனந்தனுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் பேசும்போது கூறியதாவது:

1996ல் ரஜினிகாந்த் காங்கிரஸ் தலைமையில் அமைந்த கூட்டணியை ஆதரிக்க முன் வந்தார். பல சந்திப்புகளை பல கட்சி தலைவர்களோடு நடத்தி தமிழ்நாடு காங்கிரசுக்கு 14 கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருந்தோம். ரஜினியின் செல்வாக்கைப் பற்றி மக்கள் கருத்தைக் கேட்டறிந்த ஓர் அமைப்பு அவருக்கு மக்களிடையே 56 சதவீதம் ஆதரவு இருப்பதாக அறிவித்தது.


தமிழ்நாடு காங்கிரசின் நிர்வாகக்குழு என் தலைமையில் கூடி ஒருமனதாக வரவேற்றது. பல பணிகளுக்கிடையேயும் 3 முறை டெல்லி சென்று அன்றைய அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும், பிரதமராகவும் இருந்த நரசிம்மராவைச் சந்தித்தார் ரஜினிகாந்த். அரசியல் ரீதியான சில வேண்டுகோள்களை வைத்து; தனது முழுமனதான ஆதரவையும், உழைப்பையும் தர முன்வந்தார். அதை நரசிம்மராவ் ஏற்கவில்லை.


நான் காலைப்பிடிக்காத குறையாக கண்ணீர் மல்க மன்றாடினேன். எனக்குப் பதவி வேண்டாம், ஆனால் காமராஜ் தொண்டன் குமரி அனந்தன் தலைவராக இருந்தபோது இழந்த காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வந்தது என்று வரலாறு பதிக்கும் ஒரு வரி எனக்குப்போதும் என்று கெஞ்சினேன். ரஜினிகாந்த் சொன்னதைக் கேட்டிருந்தால் அன்றே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்கும். என் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய ஏமாற்றம் அது. இவ்வாறு குமரி அனந்தன் பேசினார்.




http://dinasarinews.blogspot.com




  • http://dinasarinews.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger