Sunday 24 March 2013

மயக்க மருந்து கொடுத்து மாணவி புதரில் வைத்து கற்பழிப்பு

திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதியின் 12 வயது மகள் ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறாள். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு லக்காபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுமி சென்றாள். பின்னர் அங்கு நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றாள். அப்போது அங்கு வந்த கல்லூரி மாணவர் அந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்தார். பின்னர் குளிர்பானத்தில் மயக்க மருந்துகொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் சிறுமி மயங்கி சரிந்தார். இதையடுத்து அந்த வாலிபர் அவரை குண்டு கட்டாக தூக்கி சென்று அங்குள்ள புதரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்த சிறுமி வலியால் துடித்தார். பின்னர் நடந்த சம்பவங்களை தனது உறவினர்களிடம்தெரிவித்தாள். உறவினர்கள் இன்று ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger