Saturday 13 August 2011

ஒரு மாதம் பொறுங்���, நானே வந்து பார்க்கிறேன்! - விவிஐ��ிகளுக்கு ரஜினி பதில்



சிங்கப்பூரிலிருந்து ரஜினி சென்னை திரும்பி இன்றோடு 1 மாதம் ஆகிறது. இதுவரை வீட்டிலிருந்து வெளியே வரவில்லை அவர்.

இந்த ஒரு மாத காலத்தில் அவரைப் பார்க்க நெருங்கிய உறவினர்கள் கூட போயஸ் கார்டன் வரவில்லை. அவர்கள் வர ஆரம்பித்தால் தொடர்ந்து பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் வரத் தொடங்கிவிடுவார்கள். இது ரஜினி உடலிநிலையில் மீண்டும் ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்திவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் காரணமாம்.

அதற்கேற்ப, ரஜினியைப் பார்க்க ஏராளமான விவிஐபிக்கள் ஆர்வம் காட்டி, தினமும் அவருக்கு போன் செய்து வருகிறார்களாம். டெல்லித் தலைவர்கள், சென்னை பிரமுகர்கள் நேரில் வந்து பார்க்கலாமா என்று அன்புடன் கேட்க, ரஜினியோ என்ன சொல்வதென்று தெரியாமல் தவிக்கிறாராம்.

ஒருவருக்கு ஓகே சொல்லி, அடுத்தவரை சங்கடத்தில் ஆழ்த்த விரும்பாத ரஜினி, அனைவருக்குமே சொல்லும் பதில், "ஒரு மாதம் பொறுங்க, நானே அனைவரையும் வந்து சந்திக்கிறேன்," என்பதுதான்.

பேசும் வாய்ப்பாவது கிடைத்ததே என்ற திருப்தியில், பார்க்கும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்களாம் ரஜினி அன்பர்கள்!







http://photo-actress-hot.blogspot.com




  • http://photo-actress-hot.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger