Sunday 21 August 2011

தூக்கு தண்டனையை ���த்து செய்யக்கோரி அமெரிக்க தமிழர���கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)



அமெரிக்காவில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து செய்வதற்காக கையெழுத்து பிரச்சாரம் நடைப்பெற்றது பெரும் கவனத்தை ஈர்த்தது.

சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி தமிழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியர்வர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பிரிமாண்ட நகரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சான் ஒசே, சன்னிவேல் உட்பட அருகில் இருந்த பல நநரங்களில் இருந்து தமிழர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்ததை காண முடிந்தது.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியர்வர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிய கோரிக்கை மனுவில் கையொப்பங்களை சேகரித்தனர்.

இந்திய தூதரகத்தின் மூலம் இந்த கோரிக்கை மனு இந்திய அரசிற்கும் தமிழக முதல்வருக்கும் அனுப்பி வைக்க இருப்பதாக தெரிவித்தனர்.

மரண தண்டனைக்கான எதிரான பதாகைகளை ஏந்தி பிரிமாண்ட சென்ட்ரல் பூங்காவை சுற்றி ஊர்வலம் சென்றனர். பல இன மக்களுக்கும் போராட்டத்திற்கான காரணத்தை ஆர்வமாக கேட்டறிந்து தமிழர்களின் இப்போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்ததை கேட்க முடிந்தது.

இந்த ஆர்பாட்டத்தை ஒருகினைத்த தமிழ் உணர்வாளர்கள் தமிழக முதலமைச்சர் தலையிட்டு ஆளுநர் மூலம் மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.









http://devadiyal.blogspot.com




  • http://devadiyal.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger