Thursday 9 February 2012

கௌரவமா.. போடா போட��யா ?!



சிம்பு நடிப்பில் நீண்ட மாதங்களாக உருவாகி வரும் படம் ' போடா போடி'. விக்னேஷ் இயக்கி வரும் இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார் வரலெட்சுமி சரத்குமார்.

'போடா போடி' எப்போது திரைக்கு வரும் என்பது தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் ராதாமோகன் இயக்க இருக்கும் புதுப் படமொன்றில் நாயகியாக நடிக்க இருக்கிறார் வரலெட்சுமி சரத்குமார்.

நாகார்ஜுனாவின் மகன் நாகசைந்தன்யா இப்படத்தில் நாயகனாக நடிக்க
இருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் தயாராக இருக்கிறது.

'பயணம்' படத்தின் மூலம் நாகார்ஜுனா, ராதாமோகன் இடையே உருவான நட்பு அவர்களை மீண்டும் இணைத்து இருக்கிறது. இப்படத்தினை தயாரிக்கும் பொறுப்பை ஏற்று இருக்கிறார் நாகார்ஜுனா.

'கெளரவம்' என இப்படத்திற்கு தலைப்பிட்டு இருக்கிறார்கள். நாயகன், நாயகியை வைத்து ஒரு போட்டோ ஷுட் கூட முடித்து இருக்கிறாராம் ராதாமோகன்.

'போடா போடி' வரலெட்சுமியா அல்லது 'கௌரவம்' வரலெட்சுமியா..? பார்ப்போம் !





  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger