Saturday 17 September 2011

"பொங்குதமிழ்" கனடியத் தமிழர் தேசி��� அவை விடுக்கும் ���ேண்டுகோள்



ஒக்டோபர் மாதம் ரொறன்ரோவில் நடைபெறவிருக்கும் 'பொங்குதமிழ்' உரிமைக்குரல் எழுச்சிப்பேரணி நிகழ்வு சம்பந்தமான கருத்துப் பரிமாற்றமும் கலந்துரையாடலும்.

ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு மக்களின் விடிவுக்காக கனடியத் தமிழர் நாம் உரிமைக்குரல் எழுப்புவோம். நாம் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்பதன் மூலமே இலங்கை அரசிற்கு எதிராகச் சர்வதேசத்தின் பாரிய அழுத்தத்தைக் கொடுக்க முடியும்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ரொறன்ரோவில் நடைபெறவிருக்கின்ற பொங்குதமிழ் உரிமைக்குரல் நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் வகையில் செப்ரம்பர் மாதம் 25ம் திகதி மதியம் 2.00 மணி தொடக்கம் 5.00 மணிவரை ஓர் கருத்துப் பரிமாற்ற நிகழ்வு கனடியத் தமிழர் தேசிய அவைப் பணிமனையில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

இக்கருத்துப் பரிமாற்ற நிகழ்வில் அனைத்துப் பொது அமைப்புக்கள் விளையாட்டுக்கழகங்கள் மற்றும் ஊர்ச்சங்கங்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை கேட்டுக்கொள்கிறது.

தொடர்புகளுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)
பணிமனை: 10 - 5310 Finch Avenue East, Scarborough, ON
தொலைபேசி: 1.866.263.8622 - 416.646.7624
மின்னஞ்சல்: info@ncctcanada.ca
இணையத்தளம்: www.ncctcanada.ca

http://snipshot.blogspot.com



  • http://snipshot.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger