Saturday 4 January 2014

மும்பையில் குப்பை பொறுக்கிய 55 வயது பெண்ணை கற்பழித்து three drug addicts held for rape murder of ragpicker

Three drug addicts held for rape murder of ragpicker மும்பையில் குப்பை பொறுக்கிய 55 வயது பெண்ணை கற்பழித்து கொன்ற போதை இளைஞர்கள் கைது Three drug addicts held for rape murder of ragpicker

மும்பை, ஜன. 5-

மும்பை காட்கோபர் பகுதியின் ஒரு ஓரமாக கடந்த 1-ம் தேதி அன்று குப்பை பொறுக்கும் 55 வயது பெண்மணி  இறந்துகிடந்தார். முதலில் போலீசார் இதை தற்செயலான இறப்பு என்று எண்ணினர். பின்னர், பிரேத பரிசோதனை அறிக்கையானது அவர் கற்பழிக்கப்பட்டு அடித்துக்கொல்லப்பட்டுள்ளார் என்று கூறியது.

இதையடுத்து குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அப்பகுதியிலுள்ள அனைத்து குப்பை பொறுக்குபவர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஆரிப் ஷேக் என்ற ஒரு குப்பை பொறுக்கும் இளைருக்கும் அந்த பெண்மணிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று ஆரிப் ஷேக் (21), தனது நண்பர்களான ராஜூ ஜெய்சுவால் (22), மிலிந்த் டாய்டே (22) ஆகியோருடன் காட்கோபர் பகுதியில் மது அருந்திகொண்டிருந்தபோது போலீசாரிடம் சிக்கினர். இவர்களிடம் நடந்த விசாரணையில் போலீசார் கூறியதாவது: -

போதைக்கு அடிமையான இந்த குப்பை பொறுக்கும் மூன்று இளைஞர்களும் கடந்த டிசம்பர் 31-ம் தேதி இரவு மது அருந்தியுள்ளனர். பின்னர் அந்த 55 வயது குப்பை பொறுக்கும் பெண்மணி படுத்திருந்த இடத்திற்கு சென்று ஆரிப் ஷேக் முதலில் கட்டாயப்படுத்தியிருக்கிறான். இதைத்தொடர்ந்து மூவரும் பலவந்தமாக அந்த பெண்ணை கெடுத்து இருக்கிறார்கள்.

பின்னர் அந்த பெண் போலீசில் புகார் தெரிவித்து விடுவார் என்று பயந்த அவர்கள், அந்த பெண்ணின் தலையில் கல்லால் அடித்துக்கொன்றுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இக்குற்றத்தை உறுதிபடுத்த டி.என்.ஏ. மற்றும் மருத்துவ அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். 
...

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger