Monday 15 August 2011

காங்கிரஸ் கட்சி��ில் ஒருவருக்கு ஒருவர் நேரில் பார���த்தால்கூட சிரிப்பது கிடையாது: ஈ.��ி.கே.எஸ். இளங்கோவ���்




விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் இல்ல விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,

தற்போது ஆண்களுக்கு சரிசமமாக பெண்கள் வளர்ந்து வருகிறார்கள். அவர்கள் 33 சதவீத இடஒதுக்கீடு போதாது 50 சதவீதம் வேண்டும் என கேட்கிறார்கள். இது விரைவில் நிறைவேறும் காலம் வரும். இந்த இளங்கோவனை காங்கிரஸ் மேலிடம் ஏமாற்றிவிட்டது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கடைசி வரை நம்ப வைத்து ஏமாற்றியது. அதற்காக வருத்தப்பட வில்லை.


மேலிடத்தின் மீது கோபம் இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. கட்சி நன்றாக இருந்தால்தான் இந்தியா நன்றாக இருக்கும். இந்தியா நன்றாக இருந்தால்தான் தமிழகம் நன்றாக இருக்கும். 1967 ம் ஆண்டு இழந்த பெருமையை நாம் பெற்றாக வேண்டும். அதற்கு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும். காந்தியடிகள், காமராஜர் உள்பட பல தலைவர்கள் சுதந்திர போராட்டத்திற்காக சிறைக்கு சென்றுள்ளனர். இதுதான் உண்மையான தியாகம். ஆனால் இன்றைக்கு அரசியல்வாதிகள் பலர் சிறைக்கு செல்கின்றனர். அதற்கு வேறு காரணம்தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் இந்த கோஷ்டி, அந்த கோஷ்டி என உள்ளது. ஒருவருக்கு ஒருவர் நேரில் பார்த்தால்கூட சிரிப்பது கிடையாது. இது மாறவேண்டும். ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து நட்பு பாராட்ட வேண்டும். நாம் அனைவரும் இணைந்து ஒருவராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.





http://snipshot.blogspot.com




  • http://snipshot.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger