Wednesday 16 April 2014

பணத்துக்காக நடித்ததை விட நட்புக்காக நடித்ததுதான் அதிகம்: சந்தானம் சொல்கிறார்



சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. மற்றவர்கள் படத்தில் நடித்தபோது அந்த படத்தின் விழாக்களுக்கோ, புரமோஷனுக்கோ வராத சந்தானம் தன் படம் என்பதால் மீடியாக்களை கூப்பிட்டு கூப்பிட்டு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். "நான் பணத்துக்காக நடித்ததை விட நட்புக்காக நடித்ததுதான் அதிகம்" என்ற புதிய தகவலையும் கூறியிருக்கிறார். 

அவர் மேலும் கூறியிருப்பதாவது: நான் ஹீரோவாகவே நடிக்க ஆசைப்பட்டிருந்தால் அறை எண் 305ல் கடவுள் படத்துக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது அப்போதே நடித்திருப்பேன். பயந்துதான் நடிக்கவில்லை. கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்துக்கு மக்கள் கொடுத்த ஆதரவுதான் ஹீரோவாக நடிக்கும் துணிச்சலை கொடுத்தது. நான் ஹீரோவாயிட்டா காமெடியன்களுக்கு பஞ்சம் வந்திடாது. வேற ஒருத்தர் வந்து அசரடிப்பார். இப்பவே புதுசா நிறைய பேர் வந்து கலக்குறாங்க.

மற்ற படங்களோட புரமோஷனுக்கு வர்றதில்லைன்னு மைக் கிடைக்கிறவங்கதான் மேடைக்காக சொல்றாங்க. நான் நடிச்ச படத்தோட தயாரிப்பாளரோ, இயக்குனரோ சொல்லியிருக்காங்களா, ஏன்னா அவுங்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். நான் பணத்துக்காக நடிச்சதை விட நட்புக்காக நடிச்சதுதான் அதிகம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்கு பிறகு ஹீரோவத்தான் தொடர்ந்து நடிப்பேன்னு நான் எங்கேயும் சொன்னதில்லை. மீண்டும் காமெடியனாகவும் நடிப்பேன்.

இவ்வாறு சந்தானம் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger