Monday 21 April 2014

முத்தக் காட்சியில் ஹீரோவின் உதட்டை கடித்த கங்கனா ரணாவத்!




தமிழில் தாம்தூம் உள்பட சில படங்களில் நடித்தவர் கங்கனா ரணாவத். இப்போது இந்தியில் கவர்ச்சி கன்னி. தற்போது அவர் ரிவால்வார் ராணி என்ற படத்தில் நடித்து வருகிறார். சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்கார ராணியாக நடித்து வருகிறார். படத்தில் கங்கனா நடித்துள்ள முத்தக்காட்சி தான் இப்போது பாலிவுட்டில் ஹாட் டாபிக். முத்தக்காட்சி இப்போ சர்வசாதரணம் தான் என்றாலும் இது கொஞ்சம் ஸ்பெஷல். இந்த முத்தக்காட்சியில் நடித்தபோது ஹீரோ வீர்தாசின் உதட்டை கடித்து கங்கனா ரத்தகாயமாக்கியது தான் அந்த சிறப்பு.

சில நாட்களுக்கு முன்பு மும்பை ஸ்டூடியோ ஒன்றில் இந்த முத்தக்காட்சியை எடுத்தார்கள். ஹீரோ வீர்தாசுக்கு முத்தக் காட்சி புதுசு. அதனால் தயக்கத்துடன் நடித்தார். இதனால் பல டேக்குகள் போனது. எரிச்சலுற்ற கங்கனா, ஒரு டேக்கில் வீர்தாசின் உதட்டை இழுத்து வைத்து கடித்துவிட, வீர்தாஸ் உதட்டில் ரத்தம் கசிந்தது. கங்கனா ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் ஒரு வாரத்துக்கு பிறகு வீர்தாசுக்கு பயிற்சி கொடுத்து கங்கனாவை சமாதானப்படுத்தி நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்த ரத்தமுத்த காட்சியை மேக்கிங் வீடியோவில வெளியிட்டு படத்துக்கு பரபரப்பு பப்ளிசிட்டியை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger