Monday 8 July 2013

இளவரசன் – திவ்யா காதல் , கடைசி காதல் கடிதம்

இளவரசன் தனக்கு கடைசியாக எழுதிய காதல் கடிதத்தை பார்த்து திவ்யா கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றியதாக கூறப்படுகிறது. 
இளவரசன்–திவ்யா காதல் தமிழகத்தில் யாரும் மறக்க முடியாத சுவடுகளாக பதிவாகி விட்டது. கலப்பு திருமணம் செய்ததால் ஏற்பட்ட மோதல், வன்முறை என சினிமாவை போல் நீண்டு கொண்டே சென்ற இவர்களின் காதல் இளவரசனின் மரணத்தால் முடிவுக்கு வந்து விட்டது.
காதல் மனைவியை பிரிந்த துக்கத்தில் இருந்த இளவரசன் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இறந்து விட்டது பல காதல் ஜோடிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இறந்து கிடந்த இளவரசன் தனது மனைவி திவ்யா, பெற்றோருக்கு தனிதனியாக கடிதம் எழுதி உள்ளார். அதில் திவ்யாவை அவர் எந்த அளவுக்கு நேசித்து உள்ளார் என்று விவரித்து உள்ளார். இந்த கடிதம் இளவரசனின் பெற்றோரிடம் போலீசார் படிக்க கொடுத்தனர். இதே போல் அந்த கடிதத்தை போலீசார் திவ்யாவிடமும் படிக்க கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.
இளவரசனின் கடைசி காதல் கடிதம் பற்றி பத்திரிகை மற்றும் டி.விக்களில் செய்தி வெளியிடப்பட்டு வருவதை பார்த்த திவ்யா கண்ணீர் விட்டு கதறி அழுததாக கூறப்படுகிறது. தனக்காக தன் உயிரையும் விட்ட இளவரசனை நினைத்து திவ்யா மிகுந்த சோகத்தில் உள்ளார்.

அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி வருகிறார்கள். மேலும் ஐகோர்ட்டு உத்தரவுப்படி திவ்யாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதால் நெருங்கிய உறவினர்களை தவிர வேறு யாரையும் போலீசார் திவ்யாவின் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.
சோகமே உருவான நிலையில் திவ்யா உள்ளார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் நிற்கிறார் திவ்யா. காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய போது இருவரும் கைகோர்த்து நின்றனர். தற்போது இளவரசனின் மரணத்தால் திவ்யா மட்டும் தனிமையில் இருக்கிறார்.
காதலால் ஒரு புறம் தந்தையை இழந்தும், மறுபுறம் காதல் கணவரை இழந்தும், சமூகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை நினைத்தும் திவ்யாவின் மனநிலை குழப்பத்தில் உள்ளது. மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ள திவ்யாவுக்கு ஆறுதல் கூறுவது கூட கடினம் தான்.
தர்மபுரியில் ரெயில்வே தண்டவாளம் அருகே பிணமாகக்கிடந்த இளவசரன் உடல் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனை வீடியோவும் எடுக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சியை இன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் தனபாலன், செல்வம் ஆகியோர் பார்வையிடுகின்றனர். அவர்களுடன் வீடியோ படத்தை பார்க்க இளவரசனின் பிணத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் தண்டர் சீப், சதீஷ்குமார், ரவிக்குமார் ஆகியோர் தர்மபுரியில் இருந்து சென்னை சென்று உள்ளனர். நீதிபதிகள் குழுவுடன் இந்த 3 டாக்டர்களில் ஒருவர் அந்த வீடியோ காட்சியை பார்வையிடுவார்.
இவர்களுடன் சேர்ந்து இளவரசன் பெற்றோர் சிபாரிசு செய்து உள்ள சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த டாக்டர் டெக்காலலும் வீடியோ காட்சியை பார்வையிடுகிறார். இவர் சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல ஆஸ்பத்திரிகளில் சட்டம் சார்ந்த மருத்துவத்துறையில் பணியாற்றி பல பிணங்களை பரிசோதனை செய்து அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. காதலுக்காக உயிரை விடத் தெரிந்தவனுக்கு பெற்றோருக்காக காதலை விடத் தெரியல
    !!!!!

    ReplyDelete
  2. true love but uyira vitta ilavarasan yosichurukanu namma ellana divya enna aavanu... athe mari aasa aasaya love panni kalyanam pannikitu thitirunu venanu sonna ilavarasan enna aavanu yosikanu... adutha padiya jaathi,matham atha pathi pesara ellarayum ninna vechu sutalam thappula... love panra ellaruku ivanga oru periya yetuthukattu... ella loverskum naa unga friend onu solra yethukakavu yarukakavu unga love ah nenga thiyakam pannathinga plz.... unmaiya lovenala athu kandipa mudiyathu... tharkolayum sethithaa solra

    ReplyDelete

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger