Monday 17 October 2011

சண்டையெல்லாம் இல்லை... ஒண்ணா சந்தோஷமா இருக்கோம்! - நயன்தாரா

 
 
 
எனக்கும் பிரபுதேவாவுக்கும் சண்டை ஏதுமில்லை. நாங்கள் இருவரும் சந்தோஷமாக ஒன்றாக இருக்கிறோம் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
 
நயன்தாரா மீது கொண்ட காதலால் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. விரைவில் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணம் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது இருவருக்கும் சண்டை வந்துவிட்டதாகவும் திருமணம் நின்றுவிட்டதாகவும் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்று ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப, அது தீயாகப் பற்றிக் கொண்டது.
 
முன்னணிப் பத்திரிகைகளும் இதுகுறித்து விசாரித்து, நயன் - பிரபுதேவா சண்டை உண்மைதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டதால் செய்தி வெளியிட்டன.
 
இந்த நிலையில் இன்று இந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை நயன்தாரா.
 
அவர் கூறுகையில், "எங்கள் உறவில் எந்த விரிசலும் இல்லை. நாங்கள் சந்தோஷமாக, ஒற்றுமையாக உள்ளோம். இந்த செய்தியை பத்திரிகைகளில் படித்துவிட்டு நாங்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தோம் என்பதே உண்மை. திருமணத் தேதியை விரைவில் அறிவிப்போம்," என்றார்.
 
திருமண ஏற்பாடுகள் ஜோர்
 
பிரபு தேவா - நயன்தாரா திருமணத்துக்கான ஏற்பாடுகள் விரைவில் நடப்பதாகவும், அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் திருமணம் நடக்கும் என்றும் நயன்தாரா தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger