Wednesday 9 November 2011

பிப்ரவரியில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்..

 
 
 
நயன்தாரா-பிரபுதேவா திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது. இதனால் இருவரும் இப்போது தங்கள் இருப்பிடத்தை ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு மாற்றியுள்ளனர்.
 
பிரபு தேவா இயக்கத்தில் வந்த வில்லு படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா திருமணம் ஆகாதவர்.
 
அவரை திருமணம் செய்துகொள்வதற்கு வசதியாக பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். அதன்பிறகு பிரபுதேவா, நயன்தாராவுடன் மும்பையிலும், ஹைதராபாதிலும் மாறி மாறி வசி்த்து வருகிறார்.
 
சீக்கிரமாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரபுதேவாவிடம், நயன்தாரா வற்புறுத்தி வருகிறார். பிரபுதேவா திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறார். விவாகரத்து ஆகிவிட்டாலும் முன்னாள் மனைவியையும் குழந்தைகளையும் அடிக்கடி பார்த்து வருகிறார். இதனால் பிரபு தேவா - நயன்தாரா இடையே அடிக்கடி சண்டையும், அப்புறம் சமாதானமும் ஏற்பட்டு வருகிறது.
 
இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இருவரும் வருகிற பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள்.
 
போட்கிளப் பகுதியில் புதிய வீடு
 
அதற்கு வசதியாக நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில், வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியுள்ளனர்.
 
வீட்டுக்கு தேவையான மேசை நாற்காலிகள் மற்றும் அலங்காரப் பொருட்களை நயன்தாரா கடை, கடையாக சென்று வாங்கி வருகிறார். இதனால் சென்னையின் முக்கிய கடைகளில் நயன்தாரா - பிரபுதேவா ஜோடியை அடிக்கடி பார்க்க முடிகிறது.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger