Monday 17 February 2014

வீடு புகுந்து தனியாக இருந்த பெண்ணை கற்பழித்த மந்திரியின் சகோதரர் கைது Maharashtra NCP minister brother held in molestation case

வீடு புகுந்து தனியாக இருந்த பெண்ணை கற்பழித்த மந்திரியின் சகோதரர் கைது Maharashtra NCP minister brother held in molestation case


மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவையில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத கட்சியின் சார்பில் மந்திரியாக பதவி வகிப்பவர் சசிகாண்ட் ஷிண்டே. 

இரவு நேரத்தில் வீடு புகுந்து 33 வயது மதிக்கத்தக்க பெண்ணை கற்பழித்த புகாரின் பேரில் இவரது சகோதரர் ருஷிகாண்ட் ஷிண்டேவை சதாரா மாவட்ட போலீசார் இன்று கைது செய்தனர். 

சதாரா நகரின் அருகேயுள்ள வதே பகுதியில் தனியாக வசித்து வந்த அந்த பெண்ணை வெகு நாட்களாக நோட்டமிட்டு வந்த ருஷிகாண்ட் ஷிண்டே, நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டுக்குள் புகுந்து பலவந்தமாக கற்பழித்து விட்டார். 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, ருஷிகாண்ட் ஷிண்டேவை இன்று கைது செய்த போலீசார் சதாரா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 21-ம் தேதி வரை விசாரணை காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.


0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger