Thursday 13 February 2014

கோவையில் தொடர் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்த நாள் (பிப்.14 1998) coimbatore continue bomb blast day

Img கோவையில் தொடர் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்த நாள் (பிப்.14 1998) coimbatore continue bomb blast day

1998-ம் ஆண்டு கோவையில் நடந்த இனக்கலவரம் குண்டுவெடிப்பாக மாறியது. பிப்ரவரி 14-ந்தேதி கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்குண்டு வெடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1804 - ஓட்டோமான் பேரரசுக்கு எதிரான செர்பியர்களின் முதலாவது எழுச்சி கரஜோட்ஜே என்பவனின் தலைமையில் இடம்பெற்றது. * 1876 - எலீஷா கிறே மற்றும் அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்காண காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர். * 1879 - சிலியின் ராணுவப்படைகள் பொலீவியாவின் அன்டோபகாஸ்டா நகரைக் கைப்பற்றினர். * 1900 - இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவில் ஒரேஞ்ச் மாநிலத்தை 20,000 பிரித்தானியப் படைகள் ஆக்கிரமித்தன. * 1918 - சோவியத் ஒன்றியம் கிரெகோரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 1).

* 1919 - போலந்து- சோவியத் போர் ஆரம்பமானது. * 1924 - ஐ.பி.எம். நிறுவனம் அமைக்கப்பட்டது. * 1927 - யூகொஸ்லாவியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் இறந்தனர். * 1929 - சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று அல் காப்போன் என்பவனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

* 1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பசிர் பஞ்சாங்க் என்ற இடத்தில் ஜப்பானியர்களின் தாக்குதல் ஆரம்பித்தது. * 1946 - ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது. * 1956 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநாடு மாஸ்கோவில் ஆரம்பமானது. * 1961 - 103வது தனிமம் லோரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
...

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger