Wednesday 29 February 2012

சரத் பவாரை தாக்கியவருக்கு தொடர்ந்து அடி, உதை

 
 
 
கடந்த 2011, நவம்பர் மாதம் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் சரத் பவாரை, ஹர்விந்தர் சிங் என்பவர் கூட்டத்தில் பாய்ந்து தாக்கினார். அதன் தொடர்ச்சியாக ஹர்விந்தர் சிங் தொடர்ந்து மர்ம மனிதர்களால் தாக்கப்பட்டு வருகிறார்.
 
பிப்.15 அன்று தன்னை முதலாவதாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஹர்விந்தர் அளித்த புகாரை போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை.
 
இரண்டாவதாக பிப்.18 அன்று ரவுடிகள் அவரை வீடுபுகுந்து தாக்கியுள்ளனர். மீண்டும் பிப்.25 அன்று அவரை காரில் கடத்திசென்று துப்பாக்கி முனையில் அடித்து, உதைத்து மருத்துவமனை முன்பாக தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.
 
ஆனால் தன்மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து ஹர்விந்தர் அளித்த புகாரை ஏற்று விசாரிக்க காவல்துறை தயாராக இல்லை. இறுதியாக இவ்விஷயம் பத்திரிகைகளில் வந்தபின்னர் தான், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தன்மீதான தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் கட்சிகள் இருப்பதாக ஹர்விந்தர் கூறியுள்ளார்



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger