Thursday 23 February 2012

மீனவர்கள் இன்றும் (23) கடலுக்குச் செல்லவில்லை நீர்கொழும்புல்

 

எரிபொருள் விலை ஏற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமக்கு எரிபொருள் மான்யம் வழங்க வேண்டும் என்று கோரியும் தொடர்ச்சியாக மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து விலகி உள்ள நீர்கொழும்பு ஆழ்கடல் மீனவர்கள் இன்றும் (23) கடலுக்குச் செல்லவில்லை. தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில் தமது சங்கத்தில் அங்கத்துவம் பெறும் மீனவர்கள் கடலுக்குச் செல்லமாட்டார்கள் என நீர்கொழும்பு ஆழ்கடல் மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் சமாசத்தின் தலைவர் ஜோசப் பீட்டர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இதேவேளை, தங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அடங்கிய திட்டமொன்றை பிரதி அமைச்சர் சரண குணவர்தன ஊடாக ஜனாதிபதிக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது என கம்பஹா மாவட்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் சமாசத்தின் தலைவர் ஜூட் பெரேரா கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger