Friday 4 January 2013

சிங்கப்பூரில் மரணமடைந்த மாணவியின் நண்பர் பேட்டி

சிங்கப்பூரில் மரணமடைந்த மாணவியின் நண்பர் பேட்டியை ஒளிபரப்பிய டி.வி. மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி போலீசார் முடிவு     
டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி, கடந்த மாதம் 29-ம் தேதி சிங்கப்பூரில் மரணமடைந்தார். அவருடன் சம்பவம் நடந்த பஸ்சில் பயணித்த நண்பர், அவைந்திரா பிரதாப் பாண்டே (28) என்பவர் தனியார் டி.வி. ஒன்றுக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது.
<br /><br />
இதனையடுத்து, இந்திய குற்றவியல் சட்டம் 228 (ஏ) பிரிவின் கீழ் கற்பழிப்பு போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களிள் அடையாளங்களை வெளிப்படுத்திய குற்றத்திற்காக மாணவியின் நண்பர் அளித்த பேட்டியை ஒளிபரப்பிய தனியார் டி.வி. நிறுவனத்தின் மீது டெல்லி போலீஸ் துறையின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என டெல்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் ராஜன் பகத் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger