Sunday 14 August 2011

தமிழர்கள் அழுக்��ானவர்கள்



இந்தியாவுக்கான அமெரிக்கத் துணைத் தூதுவர் தமிழர்கள் கறுப்பானவர்கள் அழுக்கானவர்கள் என்று தெரிவித்த கருத்துக்கு அமெரிக்கத் தூதரகம் வருத்தம் வெளியிட்டுள்ளது.

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்று உரையாற்றிய அமெரிக்கத் துணைத் தூதுவர் மொறீன் சாவோ, 20 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது கலாசாரம் மற்றும் மொழி பற்றி அறிந்து கொள்ள இந்தியாவுக்கு வந்ததாக கூறியிருந்தார்.

டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு தொடருந்து மூலம் 24 மணி நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டதாகவும், ஆனால் 72 மணி நேரம் கடந்தும் அந்தத் தொடருந்து பயணத்தை முடிக்கவில்லை என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் தனது தோல் தமிழர்களைப் போன்று கறுப்பாகவும் அழுக்காகவும் மாறி விட்டதாக அவர் மேலும் கூறியிருந்தார்.

இந்தக் கருத்து பொருத்தமற்றது என்றும் இதற்காக துணைத் தூதுவர் வருந்துவதாகவும் அமெரிக்கத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

http://maangaai.blogspot.com




  • http://maangaai.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger