Sunday 14 August 2011

"ஜெயா அரசு என பெய��் சூட்டி தி.மு.க., ���ாராட்டு?



அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, முதல்வராக பொறுப்பேற்று செயல்படும் புதிய அரசுக்கு, "ஜெயா' அரசு என, பெயர்சூட்டி தி.மு.க., நாமாவளி செய்கிறது. கடந்த தி.மு.க., ஆட்சியில் சட்டசபையில் ஆட்சியமைக்க போதுமான பலமின்றி கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தனித்து தி.மு.க., ஆட்சியமைத்தது. இதை சுட்டிக்காட்டி ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க., சார்பில், "மைனாரிட்டி தி.மு.க.,' அரசு என்றே விமர்சித்து பேசினார்.


தி.மு.க., தற்போது, தன் ஊடகங்களில், "ஜெயா அரசு' என, புது நாமகரணம் சூட்டியுள்ளது. தமிழில் புலமை பெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி, வார்த்தை ஜாலங்களில் விளையாடுவார். அவரது யோசனைப்படி இப்புது நாமகரணம் சூட்டப்பட்டு தி.மு.க., ஊடகங்களில் தொடர்ந்து தினமும் உச்சரிக்கப்படுகிறது. "ஜெய' என்ற வார்த்தைக்கு வெற்றி என்று அர்த்தம். "ஜெயா' அரசு என, தி.மு.க.,வின் புதிய நாமகரண உச்சரிப்புப்படி வெற்றி பெறாத அரசாகும்.

மந்திரத்தை சொல்வது போல் பெயரை தொடர்ந்து சொல்வது நாமாவளி. ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளோர் நாமாவளி சொல்லி பலன் பெறுவர் என்பது அனைவரும் அறிந்ததே. "ஜெயா அரசு' என, கூறும் தி.மு.க.,வினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, "திறம்பட தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சி செய்து ஜெயமாக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க.,வினர் மத்தியில் எழுந்துள்ளது.






http://sirappupaarvai.blogspot.com




  • http://sirappupaarvai.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger