
சமீபத்தில் பம்பாயில் நிகழ்ந்த டெஸ்ட் போட்டியில், டெண்டுல்கர் தனது நூறாவது சதத்தை நிறைவு செய்தாரானால் அவருக்கு நூறு தங்கக் காசுகள் வழங்கப்படுமென அகில இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்திருந்தது. இப்படி கொட்டும் பண மழை எல்லாம் போதாதென்பது போல சூதாட்டங்களில் வேறு ஈடுபட்டு கிரிக்கெட் வீர்ர்கள் அவ்வப்போது மாட்டிக் கொள்வதும் நிகழ்வதுண்டு. முன்னாள் கேப்டன் அஸாருதீன், நட்சத்திர வீரர் ஜடேஜா போன்றோர்கள் உதாரணம்.
இவை ஒருபுறமிருக்க இந்தியாவில் மற்ற விளையாட்டுக்கள் எங்கிருக்கின்றன என பூதக் கண்ணாடி போட்டுக் கொண்டு தேடினாலும் அகப்படாத அவலநிலை. இன்றைய தலைமுறையினருக்கு இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது தெரிந்திருக்க நியாயமில்லை, தெரியவில்லை என்று குற்றமும் சொல்ல முடியாது. இதன் கதியே இப்படியென்றால் கால்பந்தாட்டம் எம்மாத்திரம்?
ஆளுங்கட்சித் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் என கட்சி பேதமின்றி ஏதேனும் ஒரு கட்சித் தலைவர் ஏதேனும் ஒரு ஜில்லா கிரிக்கெட் சம்மேளனத்திற்கோ, அல்லது மாநில கிரிக்கெட் சம்மேளனத்திற்கோ தலைமை வகித்துக் கொண்டிருப்பார். எதுவுமே கிடைக்காவிடில், கூடுவாஞ்சேரி கிரிக்கெட் குழுவின் தலைவராகவேனும் பொறுப்பு வகித்துக் கொண்டிருப்பார். ஆனால் கால்பந்து, ஹாக்கி சம்மேளனத்திற்கு ஒரு வார்டு மெம்பர் கூட தலைவர் பொறுப்புக்கு வரத் துணிய மாட்டார். காரணம் அங்கு செல்லாத ஓட்டைக் காலணாவைக் கூடப் பார்க்க முடியாது.
இம்மாதிரியான பணப் பிரச்சனை மற்றும் ஸ்பான்ஸர் பிரச்சனைகளால் இந்தியாவில் மற்ற விளையாட்டுக்கள் எதுவுமே சோபிக்கவில்லை. 120 கோடி ஜனத்தொகையுள்ள ஒரு நாட்டில் அதிகபட்சம் ஒலிம்பிக்கில் இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்தாலே, ஒரு மாதத்திற்கு தலைப்புச் செய்தியாகின்ற கேவலம். இதையும் விட கேவலமான ஒரு நிகழ்வு மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, எங்களுடைய கிழிந்த ஷூக்களுக்குப் பதிலாக புதிய ஷூக்களும், இதர விளையாட்டு சாதனங்களையும் வாங்குவோம் என்கிறார் இந்த கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர்.
இந்தியாவில் கால்பந்தாட்டம் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது. இவ்விளையாட்டை முன்னெடுத்துச் செல்ல பலம் பொருந்திய அமைப்போ, பணபலமோ நம்மிடம் இல்லை. இதனால் இவ்வாறு செய்யும் வேலைகளின் மூலமாக்க் கிடைக்கும் வருவாயைக் கொண்டு எங்கள் விளையாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறோம் என்கிறார் தேஜ் செளஹான் எனும் கால்பந்தாட்ட வீரர்.
மத்திய அரசாங்கத்தில் விளையாட்டுத் துறை அமைச்சகம் என்று ஒன்று இருப்பதாகக் கேள்வி. அந்த அமைச்சகம் விளையாட்டுக்களை முன்னேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டாலும் கூட பரவாயில்லை; ஒரு விளையாட்டையும், அதன் வீரர்களையும் இவ்வளவு கீழான நிலைக்குத் தள்ளாமலிருக்கவேனும் ஆவன செய்ய வேண்டும்.
சச்சினுக்கு ஒரு வேண்டுகோள்: 100 அடித்த பிறகு ஒரு 100 ரூபாயை கால்பந்தாட்டதுக்கு நிதி உதவியாக தர வேண்டும்.
கசாப் போன்றவர்களை பாதுகாக்க செலவு செய்யும் அரசு அதில் 10% கால்பந்தாட்டத்திற்கு செலவு செய்யலாம். இந்திய கிரிக்கெட் அணி இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்கே விளையட கூடாது. ஞாநி போன்றவர்கள் இதை பற்றி எழுதி சம்பந்தபட்டவர்களுக்கு கொண்டு போக வேண்டும்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?