Friday 2 December 2011

நடந்தது என்ன? : மு.க. அழகிரி விளக்கம்

 
 
 
மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு, மதுரை மாநகராட்சியில் உள்ள தெற்கு மண்டலத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு புதிய எம்பி அலுவலகம் கட்டி ஒதுக்கப்பட்டது.
 
 
தற்போது ஆட்சி மாற்றத்தால் 30.11.2011 அன்று மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, அந்த இடத்தை பறித்து மீண்டும் மேற்கு மண்டல அலுவலகத்திற்காக ஒப்படைக்க மாநகராட்சி கமிஷனர் நடராஜன், மேயர் ராஜன் செல்லப்பாவிடம் ஒப்படைத்தார்.
 
 
 
 
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக டெல்லியில் இருந்தார்.
 
இந்த நேரத்தில் மதுரை உள்ள எம்பி அலுவலக இடம் பறிக்கப்பட்டச் செய்தி, மு.க.அழகிரி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.
 
இதையடுத்து டெல்லியில் இருந்து 30.11.2011 அன்று அழகிரி அவசரமாக மதுரை திரும்பினார். இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி (01.12.2011) அழகிரி விளக்கம் அளித்தார்.
 
 
அவர், ''நானே கடந்த நவம்பர் 1ம் தேதி மாநகராட்சி கமிஷனர் நடராஜனிடம் எம்.பி. அலுவலக சாவியை ஒப்படைத்துவிட்டேன். அதன்பிறகுதான் இந்த தீர்மானத்தை போட்டுள்ளார்கள். மற்றபடி என் அலுவலகத்தை பறிக்கவில்லை.
 
 
இந்த உண்மையை கமிஷனர் வெளியே சொல்லாமல் மறைப்பதால், அதிமுக பொய் பிரச்சாரம் செய்கிறது. இது என்னை மிகவும் எரிச்சல் படுத்துகிறது'' என்று கூறினார்



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger