Thursday 29 August 2013

வன்முறையை தூண்டும் வகையில் திருமாவளவன் case of violent spoken thirumavalavan cuddalore court order appear

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு: திருமாவளவன் ஆஜராக கடலூர் கோர்ட்டு உத்தரவு case of violent spoken thirumavalavan cuddalore court order appear 

கடலூர் அருகே உள்ள கீழ் குமாரமங்கலம் புதுக்கடை வீதியில் கடந்த 18.10.1997 அன்று இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பேசினர்.

அவர்கள் வன்முறையை தூண்டும் வகையிலும், ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் கடலூர் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் மாஜிஸ்திரேட்டு 2-வது கோர்ட்டில் நீதிபதி பிரபாவதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கில் தொடர்புடைய சித்திரைமூர்த்தி, திருவள்ளுவன் ஆகிய 2 பேரும் ஆஜராகினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அமுதவன் ஆகிய 2 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து இவ்வழக்கு தொடர்பான நகல்களை அடுத்த மாதம் 6-ந் தேதி திருமாவளவன், அமுதவன் ஆகிய 2 பேரும் நேரில் ஆஜராகி பெற்று செல்ல வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger