Monday 10 October 2011

கடாபி படைகள் தோல���வியின் கடைசி வி��ிம்பில்



கடாபி பிறந்த நகரான சிற்றாவில் மணற்புயல் காரணமாக நிறுத்தப்பட்ட போர் தொடர்ந்து வேகமாக நடைபெறுகிறது. இன்று சிற்றா நகரின் முக்கிய விரைவுச் சாலையை போராளிகள் குழுவினர் கைப்பற்றியுள்ளார்கள். கடாபியின் படைகள் போர் நடத்தும் கடைசி பாக்கெட் இதுவாகும். இதற்குள்ளும் அவர்கள் தோல்வியை தழுவியபடி உள்ளனர். மேலும் சிற்றா நகரின் மையம் வெறும் கால் சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட சிறிய பகுதி என்று போராளிகள் படைத்தரப்பு தளபதி நாஸர் அபு சைன் தெரிவித்துள்ளார்.

நேற்று வீசிய மணற் புயல் காரணமாக கடாபி படைகள் வேகமாக முன்னேறி நகர மையத்திற்கு வந்தனர். அதன் பின்னர் மேலை நாடுகளின் உதவியோடு 100 கவச வாகனங்கள், அதி நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டு புதிய வீறுடன் சண்டை ஆரம்பித்தது. இப்போது அல்லா ஓ அக்பர் என்றபடி போராளிகள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவே கடாபியின் இறுதி நகரமாகும். ஆனாலும் கடாபியின் படைகள் மிகச் சிறப்பாகவும் படிமுறையாகவும் போரிடுவதை மேலை நாடுகள் இதுவரை மறுக்கவில்லை. உலகத்தை எதிர்த்து ஆறு மாத காலம் அவரது படைகள் தாக்குப் பிடித்தது பெரிய விடயமாகும்.

http://girls-stills.blogspot.com



  • http://girls-stills.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger