Monday 23 April 2012

ரஜினியின் "பாபா' தோல்விக்கும் பார்சிலோனாவுக்கும் என்ன சம்மந்தம்? - நான் சப்பைக்கட்டு கட்டுகிறேன் அல்லது உண்மையை சொல்கிறேன்!




இந்த பஞ்சாயத்துக்கு என்ன எதுக்குடா இழுக்கிற?



உதை பந்து தொடர்பில் பதிவுகளை எழுதும் உத்வேகத்தில் நான் எழுத ஆரம்பித்திருந்லும் அது எந்தளவிற்கு வரவேற்பை பெறும் என்பது எனக்கு ஒரு கேள்வியாகவே இருந்தது. நான் எழுதிய முதல் உதைபந்து பதிவில் ஒரு பின்னூட்டம் + 100 ஹிட ்ஸ் கூட கிடைப்பது சந்தேகம் என்று எழுதியிருந்தேன். ஆனால் இதுவரை எழுதிய இரண்டு உதை பந்து பதிவுகளும் பலத்த வரவேற்பை பெற்றிருக்கின்றது என்று பொய் சொல்லவில்லை சுமாராக ஒரு 400- 500 ஹிட்ஸ் கிடைக்கிறது, அத்தோடு பின்னூட்டங்களும் வருகிறது. "அருமை நண்பா' ரக பின்னூட்டங்களை தாண்டி சிறந்த உதைபந்தாட்ட ரசிகர்களிடமிருந்து பிரயோசனமான பின்னூட்டங்கள் வந்திருப்பது எனக ்கு தொடர்ந்தும் அவ்வப்போது உதை பந்து பதிவுகளை எழுத ஊக்கம் தருகிறது.

இது ஒரு பதிவாகவே எழுத எண்ணம் இருக்கவில்லை. (அப்போ என்ன வெண்ணைக்கு எழுதின என்று நீங்கள் கேட்பதி நியாயம் இல்லாமல் இல்லை. #இருக்கு எண்டுறியா? இல்ல எண்டுறியா?). சரி மேட்டருக் கு வருவோம் நேற்று இடம்பெற்று முடிந்த சம்பியன்ஸ் கிண்ண போட்டி தொடர்பில் நான் எழுதிய முன்னோட்டப் பார்வை பதிவை பார்த்துவிட்டு , நடந்து முடிந்த போட்டி தொடர்பில்  நண்பர் JZ தந்த பின்னூட்டங்களுக்கு பதில் தர ஆரம்பித்தேன் , கொஞ்சம் எழுத தொடங்கி விட்டு பார்த்தால் அது ஒரு பதிவு ரேஞ்சுக்கு நீண்டிருந்தது. சரி வந்தவரைக்கும் லாபம் என்று , கொஞ்சம் மேலதிக பிட்டுக்களும் சேர்த� �து ஒரு பதிவாக தயாரித்து விட்டேன். (எப்படி என் சாமர்த்தியம்? # உன் சாமர்த்தியத்தை நாய் விறாண்ட) இதை நண்பர் JZ தனக்குரிய பதிலாக பார்க்கலாம், ஏனையோர் "பார்சிலோனா எதிர் செல்சியா நடந்தது என்ன ?" ரீதியில் படித்துக் கொள்ளலாம்.

இது ஒரு பின்னூ ட்டமாக தயாரிக்கப்பட்டு பின்னர் பதிவிடும் நோக்கத்தில் தொகுக்கப்பட்டது. எடிட்டிங்கில் ஏதாவது கோளாறாகி தொடர்புத்தன்மை எங்காவது காணாமல் போயிருந்தால் மன்னிச்சூ....

நண்பரே தங்களது வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் எனது ஆத்மார்த்தமான நன� ��றிகள்! தொடர்ந்து உங்களது ஆதரவு எனக்கு வேண்டும். 




2009 என்பது முடிந்து போனது அதைப்பற்றி இப்போது பேசுவது அர்த்தமற்றது என்பது எனது தாழ்மையான கருத் து, அத்தோடு நடுவரின் பிழையான தீர்ப்பு என்பது பார்சினோலாவின் தவறில்லையே! இதை பதிலடியாக நீங்கள் எடுத்துகொண்டால் அதை இல்லை என்றும் மறுக்க முடியாது. நான் பார்சிலோனாவின் தீவிர ரசிகன் தான் , ஆனால் நடுநிலமையான உதைபந்தாட்ட ரசிகன். எனது பதிவைப் பார்த்தால் அது உங்களுக்கு புரிந்திருக்கும். நான் செல்சியாவை குறைத்து மதிப்பிடவில்லையே! நேற்றைய போட்டியில் செல்சியா வெல்லும் அ� �்லது சமநிலை என்று தானே குறிப்பிட்டிருந்தேன்.



ஆனால் நேற்றைய போட்டியை நீங்கள் பார்த்திருந்தால் புரிந்திருக்குமே, யார் பக்கம் ஆட்டம் இருந்தது என்� ��ு! 80% பந்து பார்சிலோனாவின் பக்கமே இருந்தது, அது போக நேற்றைய ஆட்டத்தில் அறிவிப்பாளர்கள் கூட பார்சிலோனா தான் ஃகோம் டீம் போல ஆடுவதாக குறிப்பிட்டிருந்ததை அவதானித்திருப்பீர்கள். உங்கள் மன சாட்சிக்கு தெரியும் எந்த அணியின் ஆட்டம் நேற்று சிறப்பாக இருந்தது என்று. சனியாஸ் ஒன்று , பண்ணாட ஃபப்ரிகாஸ் இரண்டு இறுதி நிமிடத்தில் பெட்ரோ ரொட்ரீகஸ் ஒன்று என்று இலகுவாக அடித்திருக்� � வேண்டிய நான்கு கோல்களை பார்சிலோன தவறவிட்டது காலக் கொடுமை என்பதை விட வேறு என்ன சொல்வது?


ஸ்பெயின் டீமில இடம் கெடச்ச மாதிரி தான்!



செல்சியாவின் மைதானத்தில் இவ் வாறான ஒரு சிறந்த ஆட்டத்தை பார்சிலோனாவால் வெளிப்படுத்த முடிந்திருகிறது என்றால் அவர்களது கோட்டையான நியூ கேம்பில் அவர்களது ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. நான் எனது பதிவில் கூறியது போல இரண்டு கோல்களுக்கு அதிகமான கோல் அடித்து பார்சிலோனா வெல்வது உறுதி. இதை பார்சிலோனா ரசிகனாக சொல்லவில்லை ஒரு உதைபந்தாட்ட ரசிகனாக சொல்கிறேன்.நீங்கள் என்ன சொல� �கிறீர்கள்?



சொல்லப்போனால் செல்சி நேற்று ஆடிய தற்காப்பு ஆட்டம் அர்த்தமற்றது, காரணம் தங்களது சொந்த மைதானத்தில் தாக்குதல் ஆட்டம் ஆடி எதிரணிக்கு குறைந்தது இரண்டு கோல்களாவது அடித்தால் மட்டுமே பார்சிலோனா போன்ற வலிமையான அணிக்கு எதிராக அவர்கலது மைதானத்தில் தாக்குபிடிக்க முடியு� ��். 

செல்சியாவின் தடுப்பு ஆட்டம் அவர்கள் திட்டமிட்டு செய்தது இல்லை, வெளி மைதானத்தில் தடுப்பு ஆட்டம் ஆட வேண்டிய பார்சிலோன யாரும் எதிர் பார்க்காத வண்ணம் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியதால் செல்சியா தடுப்பு ஆட� ��டத்துக்கு நிர்பந்திக்கப்பட்டது எனலாம். ஏன் சொல்கிறேன் என்றால் போட்டியின் முதல் பதினைந்து நிமிடங்கள் செல்சியா தாக்குதல் ஆட்டத்துக்கு முனைந்ததை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். ஆனால் அதை பொருட்படுத்தாமல் பார்சிலோனாவும் தாக்குதல் ஆட்த்தை தொடரவும் வேறு வழியின்றி தனது துருப்புக்களை பின் நகத்தியது செல்சியா. செல்சியாவின் நோக்கம் தாக்குதல் ஆட்டம் ஆடி பார்சிலோனா வின் பலவீனப்பட்ட பின்களத்தை ஊடுருவி  இரண்டு கோல்களாவது போடுவதாகதான் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் செல்சியாவின் இந்த நோக்கத்தை அறிந்து தானோ என்னமோ பார்சிலோனா தடுப்பில் இறங்காமல் தாக்குதல் ஆட்டத்தையே வெளிப்படுத்திய� �ு. சும்மா சொல்லக்கூடாது நான் குறைத்து மதிப்பிட்ட கிழட்டு சிங்கம் புயோலின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. யாரும் எதிர் பாராமல் ட்ரகோபா அடித்த அந்த கோல் தவிர செல்சியாவின் எந்தவொரு வீரரும் ஆடுவதற்கு புயோல்+ பார்சிலோனாவின் பின்களம் இடம் தரவில்லை என்றால் மிகையாகாது.

வட போச்சே!


நான் எதிர் பார்த்த அளவுக்கு செல்சியாவின் ஆட்டம் அவளவு சிறப்பாக இல்லை என்று தான் சொல்லுவேன். வயதாகி விட்டது அவர்கள் உடல் தகுதி போதாது என்று நான் குறிப்பிட்ட ட்ரக்கொபா கிஷோகர் சொன்னது நியாயம் என்பதை நேற்று நிரூபித்தார், பார்சிலோனாவின் பின்களவீரர்களது (நியாயமான + நியாயமற்ற) தாக்குதல்கள சமாளிக்க முடியாமல் � ��ிணறினார், அது போக தானே சில வேளைகளில் யாரும் தட்டி விடாமலே கீழே விழுந்தார். இந்த திணறல் ஆட்டம் நியூ கேம்பில் சுத்தமாக எடுபடாது. ஆனாலும் ஒரு கோல் அடித்து ரசிகர்களின் நாயகனாகி போனார்.


லம்பார்ட் மைதானத்தில் இருந்தாரா , இல் லைய என்பதே எனக்கு தெரியவில்லை. ஆஸ்லே கோல் சுமார், டெர்ரி எதிர் பார்த்ததைவிட சொதப்பல் ரகம் தான். ஆனால் செல்சியாவின் அசத்தல் இளம் வீரர் மியரல்ஸின் ஆட்டம் பிரம்மிக்கவைத்தது. அடுத்து அணியின் கோல் காப்பாளர் பீட்டர் சேச், மனிதர் இல்லாவிட்டால் பார்சிலோனாவுக்கு இரண்டு கோல் உறுதியாகியிருக்கும். அது போல் நடுக்கள வீரர் ரமிர்ஸ், மற்றும் மிகெல் ஆகியோரது ஆட்டமும் கவனிக்கப்ப� �� வேண்டியது.


பார்சிலோனா தோற்றதற்கு செல்சியா காரணம் இல்லை. பார்சிலோனாவே தான் காரணம். நான் சொதப்பும் என எதிர் பார்த்த பார்சிலோனாவின் பின் களம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த சிறந்த முன்களம் என பெயர் வாங்கிய முன்வரிசை சொதப்பியது. முன்வரிசை என ஒட்டு மொத்தமாக பழி போடுவ� �ை விட ஃபப்ரிகாஸ் என பச்சையாக சொல்லலாம். ஆர்சனலில் இருந்து ஸ்பெயின் அணியில் தனக்கு இடம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் இடைவிலகி பார்சிலோனாவுடன் சேர்ந்து ஆடும் இந்த பக்கிக்கு ஸ்பெயின் அணியில் இடம் குடுக்க கூடாது என்று பரிந்துரை செய்கிறேன்.

இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கு ஆடும் ஸ்பெயின் வீரர்களுக்கு ஸ்பெயின் தேசிய அணியில் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைப்பது அரிது என்பதால் , ஃபப்ரிகாஸ் பார்சிலோனாவுக்கு மாறினார். ஆர்சனலின் பள்ளியில் இருந்து தெரிவான இந்த ஃபப்ரிகாஸ் ஆர்சனலுடனான தனது ஒப்பந்த காலம் முடிவைவதற்கு முன்னமே இடைவிலகியிருப்பதால் ஆர்சனல் இவருக்கு செலவழித்த செலவீங்கள� � பார்சிலோனா வழங்கும் சம்பள பணத்தில் கட்டி கட்டி கடனைத்து கொண்டிருக்கிறார் இந்த கடன்காரன்.

அந்த பன்னாடை நேற்று ஆடிய ஆட்டம் பார்சிலோனாவின் தோல்வியை உறுதி செய்தது எனலாம். மெஸ்ஸி கொடுத்த பந்தை "சிப்" பண்ணுகிறேன் பேர்வழி என� ��று கோட்டை விட்டதும், இடது காலால் அடிக்கப் போய் இன்னொரு பந்தை வெளியால் அடித்ததும் சொதப்பலின் உச்சக் கட்டம். இவரது பாஸ்களும் சொதப்பல் ஒஃப் த இயர். முதலாவது பாதியில் சனியாஸ் அடித்த பந்தும் இரண்டாம் பாதி இறுதியில் தியாகோ அடித்த பந்தும் கோல் கம்பத்தில் பட்டு திரும்ப வந்தது துரதிஷ்டத்தின் உச்சக்கட்டம்.

அது போல் எதிர் பார்த்த அளவு மெஸ்ஸி மற்றும் சனியாஸ் கூட சோபிக்கவில்லை.மெஸியின் தவறு தான் கோல் ஆகிப்போனது குறிப்பிடத்தக்கது.இதுவரை 243 கோல்களை  அடித்திருக்கும்  லியோனல் மெஸ்ஸி செல்சியாவுக்கு எதிராக கோல் ஏதும் அடிக்காமல் சொதப்பிய தொடர்ச்சியான ஏழாவது போட்டி இது. ஆனால் மெஸ்ஸி சில கோலுக்கான உதவிகளை (அஸிஸ்ற்) செய்தார், அதை பம்பிலிமாஸ் சாரி ஃபப்ரிகாஸ் மண்ணாக்கினார்.


நான் முதலில் குறிப்பிட்டது போல நேற்றைய தினம் தாக்குதல் ஆட்டம� �� ஆடியிருக்க வேண்டிய செல்சியா தடுப்பு ஆட்டம் ஆடியது அல்லது ஆடுவதற்கு நிர்பந்திக்கபட்டது எதுவானாலும் அது பார்சிலோனாவுக்கு கிடத்த முதல் வெற்றி எனலாம். போட்டிக்கு முன்னர் பார்சிலோனாவின் முகாமையாளர் பெப் குவாரியோலா சொன்னது நினைவிருக்கிறதா? "நாங்கள் ஒரு சமநிலைக்கோ அல்லது ஒன்ரு அல்லது இரண்டு என்ற குறைந்த எண்ணிக்கையிலான கோல்களோடோ போட்டியை முடித்து கொள்ளவே போராடுவ ோம்". இது நியூ கேம்பில் அதற்கு மேலதிகமாக கோல்களை பார்சிலோனா அடிக்கும் என்ற தன்நம்பிக்கையே காட்டுகிறது.

உனக்கு வட போச்சு எனக்கு வாழ்க்கையே போச்சு!


 செல்சியா நேற்று தாக்குதல் ஆட்டம் ஆடியிருந்தால் கூட  இரண்டு கோல்களை போட்டிருக்கலாமா என்பத� �� சந்தேகமே. காரணம் பார்சிலோனாவின் ஆட்டம் அவளவு சிறப்பாக இருந்தது. என்ன தான்  நேற்றைய தினம் செல்சியாவின் பதினொரு வீரர்களும் தடுப்பு ஆட்டத்தில் பிஸியாக இருந்திருந்தாலும் பார்சிலோனா அவர்களது கோல் பகுதில் வாழைப்பழம் போல நான்கு கோல் வாய்ப்புக்கள் உள்ளடக்கமாக பந்துகளை கொண்டுவந்ததை அவர்களால் தவிக்க முடியாது போனது. . செல்சியாவின் மைதானத்திலேயே இந்த நிலை என்றால் எந்த முறையான செல்சியாவின் தடுப்பு ஆட்டமும் பார்சிலோனாவின் மைதானமான நியூ கேம்பில்  பார்சிலோனாவை  தட ுத்து நிறுத்துமா  என்பது கேள்வியே!

இதை ஒரு பார்சிலோனா ரசிகனாக் சொல்லவில்லை நேற்றைய போட்டியில் செல்சியாவின் அற்புதமான ஆட்டம் ஒன்றை எதிர் பார்த்து ஏமாந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நேற்ரைய போட்டியின் புள்ளிவிபரங்களையும் , ச� ��ல்சியா ஆடிய ஆட்டத்தையும் பார்த்த உங்களுக்கெ அது புரிந்திருக்கும்.பந்து கால்களில் இருந்த விகிதம் செல்சியா 20% , பார்சிலோனா 80%. இது நேற்றைய ஆட்டம் பாசிலோனா கைகளில் இருந்ததையே காட்டுகிறது.

20%
Possession
80%
209
Passes attempted
814
159 (76%)
Passes completed (success rate)
757 (93%)
Xavi (134)
Top individual passer
Jon Obi Mikel (32)
4
Attempts on goal
24
1
Attempts on target
6
(source BBC sports 18 April 2010)
  
இங்கு ஒன்றை குறிப்பிட வேண்டும் முதல் 17/04/2010 நடந்த இன்னொரு அரையிறுதியில் ஃகோம் டீமாக ஆடிய பயன் முனீக் அணி ஒரு மூர்கத்தனமாக, நாங்கள் ஃகோம் டீம் என்ற ஆதிக்கத்தில� �� பலம் வாய்ந்த மட்ரிட் அணிக்கெதிராக  சிறந்ததொரு  தாக்குதல் ஆட்டம் ஆடி இரண்டு கோல்கள் அடித்தது நினைவிருக்கலாம்.

இரண்டாவது சுற்று அரையிறுதி செல்சியாவுக்கு ஸ்டாம்ஃபோர்ட் பிறிட்ஜ் போல் கடினமானதாக  இருக்க போவதில்லை மாறாக மிகக் கடினமானதாக இருக்கப்போகிறது. அது போல் என்னதான் பார்சிலோனா தனது சொந்த மைதானத்தில் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் , தப்பி தவறி கூட செல்சியா நியூ கேம்பில் ஒரு கோலை போடும் பட்சத்தில் பார்சிலோனா மூன்று கோலகள் அடிக்கவேண்டிய கட்டாயம் உருவாகும். அது கொஞ்சம்  கடினமான பணியாக கூட இருக்கலாம்.

(இந்த பந்தியை ஒரு பொதுவான விமர்சனமாக பார்க்க வேண்டாம், இதை பார்சிலோனா ரசிகனாக எழுதுகிறேன்) ஒரு நடுநிலமையான உதைபந்தாட்ட விமர்சகனாக நான் அது ஒரு கடுமையான பணியாக இருக்கலாம் என கூறினாலும் ஒரு பார்சிலோனா ரசிகனாக , நியூ கேம்பில் பார்சிலோனாவுக்கு மூன்று கோல்கள் என்பது சாதாரணம் என்கிறது உள் மனத ு. மூன்று என்ன? செல்சியா நேற்று ஆடிய ஆட்டத்துக்கு நான்கே சாத்தியம் என்கிறது பட்சி. நேற்றே நான்கு அடித்திருக்க வேண்டியது! என்ன தான் "பாபா" படம் ஃபிளாப் என்று பொது இடத்தில் ஏற்றுக்கொண்டாலும், ஒரு ரஜினி ரசிகனாக அதை ஏற்றுக்கொள்ளாத மனநிலைதான் இதுவும்.

அது போக எதிர்வரும்  21ம் திகதி பார்சிலோனா , மட்ரிட் அணிகள் மோதும் லா லீகாவின் "எல் கிளாசிக்" ஆட்டம் வேறு வருகிறது. அதன் காய்ச்சல் இப்போதே பரவ ஆரம்பித்திருக்கிறது. இந்த வருட லா லீகாவின் ஆரம்ப கட்டத்தில் மட்ரிட்டின் மைதானத்தில் 1 - 3 என்று  மட்ரிட்டை வீழ்த்திய  பார்சிலோனா தங்களது மைதானத்தில் சோடை போகாது என நம்புகிறேன்.

இவ்விடத்தில் , பார்சிலோனா ரசிகனாக , அந்த அணிமீது இருந்த அசாத்திய நம்பிக்கையில், நேற்று செல்சியாவின் மீது பெட் கட்ட இருந்து , என் பேச்சைக்கேட்டு கட்டாமல் விட்டு பண் நஷ்டமான டென்மார்கில் இருக்கும் எனது � ��ச்சான் உஷாந்தன் ஜகநாதனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.அரசியல்ல இதெல்லாம் சாதரணம் அப்பா! ஹி....ஹி...ஹி.....ஹி...

அட! மேற்சொன்ன ஏதாவது எதிர் வரும் 24ம் திகதி ந� �யூ கேம்பில் பிழைத்தும் போகும் பட்சத்தில் மீண்டும் ஒரு உண்மைசொல்லும் பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். அது வரையில் தொடர்ந்து இணைந்திருங்கள். பின்னூட்டம் தாருங்கள்! நன்றி வணக்கம்.ஹி....ஹி...ஹி.....ஹி...



யம்மா சகிரா! ஏதோ நீ என்னோட கேர்ள் ஃபிரண்டா இருக்கிறதால அடிக்கடி தோத்து இப்பிடி கட்டிப்பிடி வைத்தியம் வாங்கலாம் போல இருக்கே!




http://tamil-starmovies.blogspot.com




0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger