Thursday 26 April 2012

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்ட மூன்று வருட சிறை தண்டனை காலம் நேற்றுடன் முடிவு!



Friday, April, 27, 2012
இலங்கை::இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தால் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்ட மூன்று வருட சிறை தண்டனை காலம் நேற்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவருக்கு பிணை வழங்கும� ��று கோரி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

எனினும் வௌ்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக மேல் நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

இந்த சிறைத்தண்டனை தொடர்பாக பொன்சேகா சார்பில் உயர்நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதி மன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையை அடுத்து ஒரு நீதிபதி அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து தாம் நிரபராதி என தீரப்பளித்ததாகவும் ஏனைய இரண்டு நீதிபதிகளும் அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளியென தீர்ப்பளித்து மூன்று வருட சிறைத்தண்டனை விதித்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதி தமது பிணை மனுவில் குற� ��ப்பிட்டுள்ளார்.

இந்த சிறைத் தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மேற்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மேன்முறையீடு எதிர்வரும் புதன் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பொன்சேகா, அன்றைய தினம் தமது பிணை மனுவையும் பரிசீலனைக்கு எடுத்� ��ுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


http://tamil-cininews.blogspot.com




0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger