Saturday 20 August 2011

தீக்குளிக்கப் ப��றேன்... கெரசினோடு வந்த டைரக்டர்





வெங்காயம் என்றொரு படம் நேற்று வெளியாகியிருக்கிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருத்திருக்கிறார்கள். ஒரே ஒரு பாடலுக்கு சத்யராஜ் நடித்திருக்கிறார். கழகங்கள் செய்ய வேண்டிய பகுத்தறிவு பிரசாரத்தை தனி ஒரு ஆளாக நின்று செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான சங்ககிரி ராச்குமார். அதற்காக இது தமிழிலக்கணம் மாதிரி அவ்வளவு வறட்சியான படமல்ல. பொழுதுபோக்கு அம்சங்களும் கலகலப்பு காட்சிகளும் நிறைந்த படம்.

பத்திரிகையாளர்கள் காட்சியில் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ராச்குமாரை பாராட்டி மகிழ்ந்த படமும் கூட. இந்த ராச்குமார்தான் இன்று காலை பதினொரு மணிக்கு மண்ணெண்ணை டின்னோடு தீக்குளிக்க கிளம்பியிருக்கிறார். இன்று காலை மீடியா தோழர்களை தொடர்பு கொண்ட ராச்குமார், இந்த அநியாயத்தை தட்டி கேட்டால் சரியான பதில் வர மாட்டேங்குது. தீக்குளிப்பதை தவிர வேற வழியில்ல. அப்படியாவது எனக்கு நியாயம் கிடைக்குதா பார்ப்போம் என்றார் பொங்கி வரும் ஆத்திரத்தோடு.

என்னவாம்? இந்த படத்தின் க்ளைமாக்சில் சாமியார்களை பார்த்து பாதிக்கப்பட்ட சிறுமி ஒருத்தி தேவடியாப் பசங்களா என்று திட்டுவது போல காட்சி. இதன் தீவிரத்தையும் அவசியத்தையும் உணர்ந்த சென்சார் அதிகாரிகளே போகட்டும் என்ற அப்படியே இந்த வசனத்தை நறுக்காமல் அனுமதித்துவிட்டார்கள். அப்படியிருக்க, படத்தின் பிரிண்ட்டை க்யூப் சிஸ்டம் மூலம் தியேட்டருக்கு கொண்டு செல்லும் யூ எப் ஓ என்ற நிறுவனம், அந்த ஒரு வசனத்தை மட்டும் சைலண்ட் செய்துவிட்டது.

அரசு அமைப்பான தணிக்கை துறையே ஒப்புக் கொண்ட ஒரு காட்சியை தனியார் நிறுவனம், அதுவும் எங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்து தரும் நிறுவனம் நறுக்குவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்று கொந்தளிக்கிறார் ராச்குமார்.

சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் முன்புதான் இந்த தீக்குளிப்பை நடத்தப் போகிறாராம் அவர். படைப்பாளியின் சீட்டுக்கு அடியில் பச்சை மிளகாயை கொட்டி ரசிக்கிற இதுபோன்ற ஆட்களை என்ன செய்யலாம்?





http://sex-story7.blogspot.com




  • http://sex-story7.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger