Saturday 18 October 2014

மதுரையில் வீட்டில் வைத்து விபசாரம்: பெண் கைது 3 அழகிகள் மீட்பு woman arrested three woman recovery near madurai

மதுரை, அக். 18

மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஊமச்சிக்குளம் போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வீட்டில் 3 இளம்பெண்கள் இருந்தனர். அவர்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து 3 பெண்களையும் போலீசார் மீட்டனர். அவர்களது பெயர் பிரியா (வயது30), லட்சுமி (33), சரண்யா (40) என தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தத்தனேரி களத்துபொட்டலை சேர்ந்த அனார்கலி என்ற பெண் ஆசை வார்த்தை கூறி தங்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் அதிரடி விசாரணை நடத்தி அனார்கலியை கைது செய்தனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger