Monday 26 September 2011

எங்கேயும் எப்போ��ும் - நமீதா விமர்���னம்







"வண்டியை வேகமா ஓட்டாதிங்க"

இதுதான் கதையின் உட்கரு, வெளிக்கரு எல்லாம். தமிழ்நாடு அரசு சார்பாக தயாரித்திருக்கும் விபத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சி படமாக இதை எடுத்துக் கொள்ளலாம். எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி விளம்பரத்தில் திரையுலக பிரபலங்கள் வந்து அட்வைஸ் செய்வது போல இந்த படத்தில் அஞ்சலி அனன்யா மற்றும் பலர் நடித்து அதை வலியுறுத்துகிறார்கள். ஒரு குறும்படமாய் எடுக்கவேண்டியத்தை நீட்டி பெரும் படமாய் எடுத்திருக்கிறார்.

முக்கால்வாசி கதைகள் பஸ்ஸில் நடக்கும் ஒரு படத்துக்கு, பிண்ணனி இசை என்பது பெரும் பலமாய் இருக்க வேண்டும். ஆனால் இந்த படம் முழுதும் கனாக் காலங்கள் சீரியலுக்கு போடும் இசையை போலவே இருப்பது துரதிஷ்டம். படத்தின் திரைக்கதையும் கனாகாலங்கள் சீரியலில் சிரிப்பை மூட்டுவதற்காக திணிக்கப்படும் திரைக்கதையை போலவே உள்ளது. உதாரணம், Lavazza காபி ஷாப் சீன்கள்.

இதில் இரு காதல் கதைகள். அனன்யாவுக்கும் சாராவுக்கும் உள்ள காதலாவது ஒரு வகையில் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ஜெய்க்கும் அஞ்சலிக்கும் இடையேயான காதல் காட்சிகள் காமெடி ட்ராக்காக உபயோக படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஜெய் பையனுக்கு நடிக்கவே தெரியவில்லை. கிளைமேக்சில் காட்டும் பெர்பார்மன்சை படம் முழுதும் காட்டுகிறார். ". யாரோ தெரியாத்தனமாக "நீ விஜய் மாதிரி இருக்க" ன்னு சொல்லிட்டாங்க. அதை நம்பி இன்னமும் நடித்து கொண்டு இருக்கிறார் அப்பாவியாய். இவரை ஹீரோவாக நினைத்து பார்க்கவே முடியவில்லை.

படம் முழுதும் அஞ்சலி சொல்றதை எல்லாம் வாய் பொத்தி ஒழுங்கா கேட்கும் இவர், "எப்படி நடிக்கறது?" என்பதையும் அஞ்சலியிடம் கேட்டு நடித்திருக்கலாம். ஜெய்யின் பெற்றோர்கள் அவரை கூத்துப்பட்டறைக்கு ரெண்டு வருஷம் அனுப்பிவிட்டால் நலம். சரவ் மற்றும் அனன்யாவின் நடிப்பு கவருகின்றன.

அஞ்சலி பற்றி, அய்யோ என்ன சொல்வது?




அவரது கண்களும் வாயும் போட்டி போட்டு கொண்டு பேசி நடிக்கின்றன. இறுக்கி அணைத்து ஒரு உம்மா கொடுத்து பாராட்டலாம். இவரது காதாப்பாத்திரத்தை இயல்புக்கு மீறி வடிவமைத்து இருந்தாலும், கண்ணை மூடிக்கொண்டு ரசிக்க வைக்கின்றன. இவரை சரியாய் பயன் படுத்தினால் சிம்ரனுக்கு அடுத்து ஒரு "நடிகை" தமிழ் சினிமாவுக்கு கிடைக்கலாம்.

அங்காடிதெரு அஞ்சலிக்கு

படம் முழுதும் அங்காங்கே நாலு முழம் மல்லிகை பூவை வாங்கி நம் காதில் சுத்திவிடுகிறார் இயக்குனர். அதை பஸ்ஸில் உள்ளவர்கள் மல்லிகை பூவை வாங்கும் சீன் மூலமாக குறிப்பாய் உணர்த்தியதே இயக்குனரின் திறமை.

நமீதா டச்: எங்கேயும் எப்போதும், ஒரு கமர்சியல் சீரியல்

ஒரு இயக்குனரின் முதல் படம் என்று சொல்லுவதற்கு பெரிய அளவில் எதுவும் இல்லை. படம் முடிந்து தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியே வந்து என் பைக்கை எடுத்து வேகமாய் தொண்ணூறில் விரட்டினேன் சந்தோசமாய்.

டிஸ்கி: இந்த விமர்சனத்திற்கும், நமீதாவிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை. ஹிட்சுக்காக மட்டுமே உபயோக படுத்தப்பட்டுள்ளது.

http://tamil-shortnews.blogspot.com



  • http://tamil-shortnews.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger