Friday 18 November 2011

ஆவின் பால் விலை உயர்வு - இரண்டாவது விலை உயர்வை ஜெயலலிதா அறிவித்தார்

 
 
 
தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஜெயலலிதா பொதுமக்களுக்கு வெளியிட்ட விலை உயர்வு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 6.25 உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 1 லிட்டர் ரூ.17.75-க்கு விற்கப்பட்ட ஆவின் பால் இனி 24 ரூபாயாக விற்கப்படும்.
 
மேலும் உற்பத்தியாளர்களுக்கு தரும் பால் கொள்முதல் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. பசும்பால் கொள்முதல் கட்டணம் 1 லிட்டருக்கு ரூ.18-லிருந்து ரூ.20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எருமைப்பால் கொள்முதல் கட்டணம் 1 லிட்டருக்கு ரூ.26-லிருந்து ரூ.28-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 


0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger