Saturday 24 December 2011

சென்னை இசை விழா ஸ்பெசல்!



நேற்று மாலை 4.25 க்கு திருமதி சௌம்யா அவர்களின் கச்சேரி--(4.30 முதல்

ஆறு வரை ராகு காலம்!)



இந்த சீசனில் நிறையக் கச்சேரிகள் செய்வதாலும்,குளிர்காலம் என்பதாலும்

அநேகருக்குச் சில நாட்கள் தொண்டை கொஞ்சம் பிரச்சினை கொடுக்கும்.

நேற்று சௌம்யாவுக்கும் அதே நிலைதான். அதையும் மீறி நன்றாகவே

பாடினார்.மோகன ராகம் (பவனுத) குறிப்பிடும்படி இருந்தது.
------------------------------------------

சபா உறுப்பினர்-:என்ன செயலாளர் சார்! வித்துவானுக்கு இரவு உணவுக்கு

என்ன வேணுமாம்?

செயலாளர்: பழம், பால் போதுமாம்!

உறுப்பினர்:  எதுக்கு பழம் பால்?நல்ல புதுப் பாலாவே குடுத்துடலாம்!

!!!!!!!!!!!!

---------------------------------------
சென்ற பதிவில் காண்டீன் உணவுப் பொருள்களின் விலை பற்றிச் சொல்லி

யிருந்தேன்.

அதற்குத் தொடர்புடைய ஒரு நிகழ்ச்சி.

இடை வேளையில் ஒரு வயதான தம்பதி-கணவருக்கு 80 வயது இருக்கலாம்.

காரிடாரின் ஓரமாக நின்று.கொண்டு,மனைவி ஒரு டிஃபன் டப்பாவிலிருந்து

மிளகாய்ப் பொடி எண்ணெய் தடவியை தோசை எடுத்துத்தர,அவர் சாப்பிட்டுக்

கொண்டிருந்தார்.பின் மனைவியும் சாப்பிட்டார்.இருவரும் கொண்டு

வந்திருந்த  பாட்டில் தண்ணீரைக் குடித்தனர்.பின் அடுத்த கச்சேரிக்கு

அரங்குக்குள் சென்று விட்டனர்.வீட்டு உணவு;வயிறும் நிறைந்தது;

உடலுக்கும் நல்லது;காசும் மிச்சம். சபாவுக்கு வந்தது இசையின் மீதுள்ள

ஆசையால்தானே!அதுதானே முக்கியம்!


http://dinasarinews.blogspot.com



  • http://tamil-starmovies.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger