Friday 7 October 2011

உலகத்தை மாற்றிப��போட்ட உன்னத அறிவாளி மரணம்! (காணொள�� இணைப்பு)



நேற்று அப்பிள் நிறுவன ஐபோன் 5 வருமென எதிர்பார்த்து ஏமார்ந்த அப்பிள் பாவனையாளருக்கு அந்த நிறுவனத்தை இந்த நிலைக்கு உயர்த்திய ஸ்டீவ் யொப்ஸ்சின் மரணம் பேரிடியாக இறங்கியுள்ளது.

கடந்த 15 வருட காலத்தில் அப்பிள் நிறுவனத்தை உலகத்தின் அதிசயமிக்க வெளியீடுகளைத் தரும் நிறுவனமாக மாற்றிய புகழுக்குரியவர் இவரே. இவருடைய அறிவும், ஜீனியஸ்சான மூளையும் உலகத்தையே மாற்றிப்போட உதவியது என்று அப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அப்பிளில் டச் முறையை கொண்டு வந்து இலத்திரனியல் உலகத்தின் புது வலு கொடுத்த ஸ்டீவ் ஜொப்ஸ் நேற்று தனது 56 ஆவது வயதில் காலமானார்.

கடந்த சில வருடங்களாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

உலகில் கணனி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகளைத் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனமாக அப்பிள் இன்று திகழ்வதற்கு முக்கிய காரணம் இவரது திறமையாகும்.

இவர் 1955 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி சான் பிரான்ஸிஸ்கோவில் பிறந்தார்.

அவர் தனது கல்லூரிப் படிப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யாத போதிலும் கணனித்துறையில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்குப் பல சாதனைகளைத் தனது வாழ்நாளில் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

அவரின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் உலகெங்கிலுமிருந்து இரங்கல் செய்திகள் குவிந்த வண்ணமுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பில்கேட்ஸ், ஷூக்கர் பேர்க் உட்பட அனைவரும் தங்களது அனுதாப அறிக்கைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜொப்ஸ் வரலாற்றில்...

உலகத்தலைவர்கள் பலர் இவரது மறைவிற்கு தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக ஒபாமா " அமெரிக்காவின் சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் இவரும் ஒருவர் எனவும், வித்தியாசமாக யோசிக்கத் தைரியமுள்ளவர் எனவும், தன்னால் உலகை மாற்றமுடியும் என்பதை நம்புபவர் எனவும் அதை செய்து காட்டும் திறமையும் கொண்டவர் என தனது அஞ்சலி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல பிரபலங்கள் தங்களது அனுதாபத்தினை வெளியிட்டுள்ள இத்தருணத்தில் அவரின் வாழ்க்கைப்பயணங்களை மீட்டிப் பார்ப்பது சாலப்பொருந்துவதாக அமையும்.

ஸ்டீவ் ஜொப்ஸின் வாழ்நாள் மற்றும் அப்பிள் நிறுவன வரலாற்றில் சில முக்கிய தருணங்கள்

1955: ஸ்டீவன் போல் ஜொப்ஸ் பெப்ரவரி 24 ஆம் திகதி பிறந்தார்.

1972: ஜொப்ஸ் போர்ட்லேண்டில் உள்ள ரீட் கல்லூரியில் இணைந்தார் எனினும் முதல் செமஸ்டரிலேயே அதனை நிறுத்திவிட்டார்.

1976: அப்பிள் கணனியை ஏப்ரல் முதலாம் திகதி உருவாக்கினார். த அப்பிள் ஐ கணனி 666.66 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனைக்கு வருகின்றது.

1977: அப்பிள் நிறுவனம் கூட்டு நிறுவனமாக்கப்படுகின்றது. த அப்பிள் ஐஐ கணனி அறிமுகப்படுத்தப்படுகின்றது.

1978: ஸ்டீவ் ஜொப்ஸின் மகள் லிஸா பிறந்தார்.

1980: அப்பிள் நிறுவனம் முதல் முறையாக தனது பங்குகளை வெளியிட்டது (ஐய்ண்ற்ண்ஹப் ல்ன்க்ஷப்ண்ஸ்ரீ ர்ச்ச்ங்ழ்ண்ய்ஞ்). 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டிக் கொண்டது.

1982: அப்பிள் நிறுவனத்தின் வருடாந்த வருவாய் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாய் அதிகரிக்கின்றது.

1983: அப்பிளின் லிசா கணனிகள் விற்பனைக்கு வருகின்றன.

1984: அப்பிளின் மெகிண்டொஸ் கணனிகள் விற்பனைக்கு வருகின்றன.

1985: நிறுவனத்தின் அப்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கூலி மற்றும் ஜொப்ஸ் இடையே மோதல், ஜொப்ஸ் மற்றும் வொஸ்னிஹக் ஆகியோர் அப்பிளில் இருந்து பதவி விலகுகின்றனர்.

1986: ஜொப்ஸ் நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்ததுடன், உயர் தொழிநுட்பம் கொண்ட கணனிகளை பல்கலைக்கழகங்களுக்கென தயாரிக்கத்தொடங்குகின்றார்.

1989: முதலாவது நெக்ஸ்ட் கணனி விற்பனைக்கு செல்கின்றது. விலை 6,500 அமெரிக்க டொலர்கள்.

1991: அப்பிள் மற்றும் ஐ.பி.எம் நிறுவனங்கள் இணைந்து கணனிகளுக்கான புதிய மைக்ரோபுரசசர்கள் மற்றும் மென்பொருட்களை உருவாக்கவுள்ளதாக அறிவித்தன.

பவர்புக் என்றழைக்கப்படும் காவிச்செல்லக்கூடிய மெக்ஸ் கணனிகளை அறிமுகப்படுத்துகின்றது.

ஜொப்ஸ் லொரன் பவல் என்பவரை சட்டப்படி மணக்கின்றார்.

1996: ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அவரது குழு இணைந்து உருவாக்கிய நெக்ஸ்ட் நிறுவனத்தின் இயங்குதளத்தினை 430 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யும் திட்டத்தினை அப்பிள் அறிவிக்கின்றது.

1997: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கின்றார்.

2000: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கின்றார்.

2001: முதல் ஐ பொட் விற்பனைக்கு வருகின்றது. ஐ டியூன்ஸ் மென்பொருளை வெளியிடுகின்றது.

2004: கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜொப்ஸ் சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கின்றார்.

2006: ஜொப்ஸ் டிஸ்னி நிறுவனத்தின் அதி கூடிய பங்குகளைக் கொண்ட தனிநபராகின்றார்.

2007: அப்பிள் தனது முதல் கையடக்கத் தொலைபேசியான ஐ போனை வெளியிடுகின்றது.

2009: ஜொப்ஸ் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கின்றார்.

2011 ஜனவரி 17: ஜொப்ஸ் 2 ஆவது முறையாக மருத்துவ விடுமுறையில் செல்வதாக அறிவிக்கின்றார்.

2011 ஓகஸ்ட் 24: ஜொப்ஸ் தான் அப்பிளின் நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கின்றார்.

2011 ஒக்டோபர் 5: ஜொப்ஸ் காலமானதாக அறிவிக்கப்படுகின்றது.

இதேவேளை உலகம் பூராகவும் மக்கள் பலர் தங்கள் அஞ்சலிகளை செலுத்திய வண்ணமுள்ளனர்.



http://tamilhot.blogspot.com



  • http://tamilhot.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger