Friday 7 October 2011

மாணவ சிப்பாய்கள் பயிற்சிக்குச் சென்ற 15 வயது மாணவி திடீர் மரணம்

 

மாணவர் சிப்பாய்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவமொன்று குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

குருநாகல் – பொல்காஹவெல – ரத்மல்தொட்ட மத்திய மகா வித்தியாலய மாணவிகளுக்கு மாணவ சிப்பாய்கள் பயிற்சி ரன்டெம்பே முகாமில் இடம்பெற்று வருகிறது.

கடந்த இரண்டாம் திகதி தொடக்கம் மாணவிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது திடீர் சுகயீனமுற்ற மாணவி ஒருவர் அம்பகஹபெலஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

15 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

ஹசலக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger