Wednesday 14 September 2011

இங்கிருந்தும் உ��ுவாகட்டும் பல பில்கேட்ஸ்கள்...





ஒரு விஷயத்தை, முதிர்ந்த வயதில் கற்றுக்கொள்ளும் போது வரும் பயமும், படபடப்பும் சின்னஞ்சிறு வயதில் இருக்காது என்பதால், "பயமறியாத இளங்கன்றுகள்" கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம்.

சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவற்றை இப்போது பழகுவதற்கும், சின்ன வயதில் பழகுவதற்கும் எத்தனை வித்தியாசங்கள் இருக்கிறது?

இளம் வயதில் உங்கள் வீட்டில் கார் இருந்திருந்தால், நிச்சயம் நீங்கள் மிக விரைவாக, எளிதாக கார் ஓட்ட பழகி இருப்பீர்கள். (மிக குறைந்த சேதாரங்களோடு....)

அது மாதிரி, இந்த கால பள்ளிக்குழந்தைகளுக்கு சின்னஞ்சிறு வயதில் கணிணியை "நோண்டி" பார்க்கும் வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது, தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணி வழங்கும் திட்டத்தால்.

கணிணிச் சார்ந்த மிகப்பெரிய விஷயங்களை அவர்கள் இப்போதே பழக போவதில்லை என்றாலும் கூட, கையாளும் அளவிற்காவது இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது தான் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

இலவசமாக கொடுப்பதால், "கம்பியூட்டர் என்ற பெயரில் பெரிய சைஸ் கால்குலேட்டர் தான் குடுப்பாங்க" அப்படி-னு சொன்னது பொய்யாக மாறுமளவிற்கு தமிழக அரசு மிக கவனமாக, மடிக்கணிணி தரும் நிறுவனங்களை தேர்வு செய்து ஒப்பந்தம் தந்திருப்பது நம்பிக்கையூட்டுகிறது.

இனி வரும் காலம் கணிணியின் காலம் என்பது, எப்போதோ முடிவாகி விட்ட சூழ்நிலையில், நமது பள்ளி மாணவர்களும் குறைந்தபட்சம் விளையாட்டுத்தனம் என்ற அளவிலாவது கணிணியை கையாள வாய்ப்பு கிடைத்திருப்பது, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெற்று வீட்டுப்பாடங்களை கண்ணியில் செய்து வரும் அளவுக்கு இப்போதைய நிலை மாறும்.

தற்போதைய சூழ்நிலையில் பில்கேட்ஸின் மைக்ரோசப்ட் நிறுவனம் மட்டுமல்லாது, அனைத்து "பொட்டி தட்டும்" பணிகளிலும் இந்தியர்கள் தான் அதிகம் கலக்குகிறார்கள் என்ற சூழ்நிலை மாறி, தமிழர்கள் கை கணிணி துறையில் ஓங்க, இந்த இலவச மடிக்கண்ணி வழிவகுக்கும். யார் கண்டது பில் கேட்ஸ் கூட, ஒரு தமிழக மாணவனுக்கு சலாம் வைக்கும் நிலை உண்டாகும் வகையில், நம் தமிழகத்திலிருந்தும் பல பில்கேட்ஸ்கள் உருவாகி, உலகை வலம் வரலாம்.

டிஸ்கி:

இலவசங்கள் கொடுப்பது சரியா தவறா?, அரசியல் கட்சிகளுக்கு கிடைக்க இருக்கும் லாப நஷ்டங்கள் என்பதை தாண்டி, எளிய மக்களின், மகன் மகளுக்கு கணிணியை கையாள கிடைத்திருக்கும் மகிழ்ச்சியே இந்த பதிவின் அடிப்படை.
 
கணிணி மூலம் இணையத்தினை தவறாக பயன்படுத்துவார்களே என்ற கவலையும் உண்மைதான். ஆனால் இந்த விஷயங்களில் சரியான வழிகாட்டுதலை வழங்க முடிந்தால், நிச்சயம் இனியெல்லாம் சுகமே.(விரைவில் வலைப்பூக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும் என்பது நமக்கான இப்போதைய சந்தோஷம்... பதிவுக்கு ஓட்டு போட ஆள் கிடைக்குமே..)


http://tamilsmsgalatta.blogspot.com



  • http://tamilsmsgalatta.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger