Wednesday 17 August 2011

வேலூரில் மரணதண்��னை ஒழிப்பு கருத்தரங்கம்



பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி வேலூரில் மரணதண்டனை ஒழிப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

வேலூர் மாவட்டம் சோலையார் பேட்டையில் உள்ள சந்தை கோடியூரில் வரும் 22-ம் தேதி(சனிக்கிழமை) மாலை 3.00 மணிக்கு கேஜிஎஸ் திருமண மண்டபத்தில் "மரணதண்டனை ஒழிப்பு" மற்றும் "தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்" நூல் ஆய்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 20 வருடங்களுக்கு மேலாக மரணதண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளனின் விடுதலையை வலியுறுத்தி "மரணதண்டனை ஒழிப்பு" மற்றும் "தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்" நூல் ஆய்வு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இந்த கருத்தரங்கில் சீமான், (நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்), கொளத்தூர் த.செ.மணி, (தலைவர், பெரியார் திராவிடர் கழகம்), தமிழ் முழக்கம் சாகுல் அமீது, (மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி), பேராசிரியர் சரசுவதி( தலைவர், பெண்கள் முன்னணி), வழக்கறிஞர் தடா சந்திரசேகர், வழக்கறிஞர் பிரிட்டோ (மனித உரிமை ஆர்வலர்) ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

இந்த நிகழ்ச்சி பேரறிவாளனின் சொந்த ஊரில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



http://devadiyal.blogspot.com



  • http://devadiyal.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger