Wednesday 17 August 2011

சீமான் மீது நடவட���க்கை எடுக்கக் க��ரி டிஜிபியிடம் இளைஞர் காங். மனு



காங்கிரஸ் தலைவர்களையும் தொண்டர்களையும் இழிவுபடுத்தி பேசி வரும் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், டிஜிபி ராமானுஜத்திடம் மனு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மனு கொடுத்து விட்டு வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ் கூறுகையில்,

விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்தும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களை இழிவுபடுத்தியும் சீமான் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இது குறித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தோம். சீமான் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் நீதிமன்றத்தால் தூக்குதண்டனை விதிக்கப்பட்டவர்களை நிரபராதிகள் என்று பேசி வருகிறார்கள். இதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். உடனடியாக அவர்களை தூக்கிலிடவேண்டும். நீதி மன்றத்தில் விதிக்கப்பட்ட தீர்ப்பை பொதுக்கூட்டத்தில் விவாதிக்கக்கூடாது என்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்துள்ளோம்.

இது பற்றி பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அவர் பதில் அளித்தார். சீமான் வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார். இதே போக்கு நீடித்தால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு என்றும் ஆதரவாக இருப்போம்.

அதே நேரத்தில் எங்களுக்கு விடுதலை புலிகள்தான் எதிரானவர்கள். ராஜீவ்காந்தியை கொலை செய்தவர்களை குற்றவாளியாக பார்க்கவேண்டும்.

தமிழர்களின் உணர்வுகளை இதில் சேர்க்கவேண்டாம். சீமான் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் நிச்சயமாக அடுத்தகட்டமாக தகுந்த பதில் அடி கொடுப்போம். இளைஞர் காங்கிரசை பொறுத்தவரை அமைதியாக இருக்க மாட்டோம் என்றார்.

முன்னதாக சத்தியமூர்த்தி பவனிலிருந்து டிஜிபி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர் காங்கிரஸார். அவர்கள் கொடுத்த மனுவில்,

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேருக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தூக்குதண்டனைக்கு எதிராகவும், தூக்குதண்டனை கைதிகளை ஆதரிப்பதும் நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். ராஜீவ்காந்தி படுகொலை தூக்குதண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று இன்று குரல் கொடுப்பவர்கள் நாளை அப்சல் குருவையும் விடுவிக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தயங்க மாட்டார்கள்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக அரசின் நிலைமையை காரணமாக கொண்டு தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவி அதனால் வெடிகுண்டு கலாசாரம் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் தமிழர் விடுதலைப்படையை சேர்ந்த 2 பேர் பயங்கரமான வெடிகுண்டு தயாரிப்பதற்கான டெட்டனேட்டருடன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜீவ்காந்தி படுகொலைக்கு காரணமான தூக்குதண்டனை கைதிகளை ஆதரித்து சென்னையில் நாம் தமிழர் கட்சி மற்றும் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த போலீசார் வழங்கிய அனுமதியை ரத்துசெய்யவேண்டும். பொதுக்கூட்டத்திற்கு தடையும் விதிக்கவேண்டும் என்று கோரியுள்ளனர் காங்கிரஸார்.



http://devadiyal.blogspot.com



  • http://devadiyal.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger