Saturday 1 October 2011

சோயிப் அக்தர் பந்துவீச்சை எதிர்கொள்ளும்போது சச்சின் கால்கள் நடுங்கும்: அப்ரிடி

 
 
சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தருக்கு சர்வதேச கிரிக்கெட் ஆணையம் தடை விதித்து உள்ளது. அவர் கான்ட்ரோ வெர்ஸியலி யூவர்ஸ் என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார்.
 
இந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் பெரும் சர்ச்சையாகி உள்ளது. அக்தர் தனது புத்தகத்தில் தெண்டுல்கர், டிராவிட் குறித்து தேவையில்லாமல் விமர்சித்துள்ளார். இருவரும் மேட்ச் வின்னர்கள் இல்லை என்றும், அதோடு தெண்டுல்கர் தனது பந்து வீச்சுக்கு பயப்படுவார் என்றும் கூறியுள்ளார்.
 
இந்த கருத்திற்கு பல கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மும்பையில் புத்தகம் வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது.
 
இந்நிலையில் (சோயிப் அக்தர்) ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் பந்துவீச்சை எதிர்கொள்ளும்போது சச்சின் கால்கள் நடுங்கும். அதை நான் பார்த்துள்ளேன் என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger