Monday 3 October 2011

பிரபஞ்ச வரலாற்ற��ல் மாபெரும் கண்டுபிடிப்பு- சில சந்தேகங்கள்



இது வரை நடந்துள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் உச்சமாக , புதிய கண்டு பிடிப்பு நிகழ்ந்துள்ளதாக அறிவியல் உலகம் பெருமையில் மகிழ்ந்து போய் இருக்கிறது.. அறிவியலாளர்கள் பிரமித்து போய் இருக்கின்றனர்... ஒரு வேளை இந்த கண்டு பிடிப்பு உறுதி செய்யப்பட்டால், நாம் இது வரை படித்த அறிவியலின் அடிப்படையே தகர்ந்து போய் விடும்.. ஒரு செயல் என்றால் அதற்கு விளைவு இருக்க வேண்டும் என்பது நம் அடிப்படை நம்பிக்கை.. நிகழ்காலம் என்பது இறந்த காலத்தில் இருந்து , எதிர்காலம் நோக்கி செல்லும் பயணத்தில், ஒரு மைய இடம் என நினைக்கிறோம்... இது எல்லாம் தவறாகி விடும் , இந்த புதிய கண்டுபிடிப்பு நிரூபிக்கப்படும் பட்சத்தில்..

அப்படி என்ன பெரிய கண்டுபிடிப்பு?

ஒளியை விட விரைவாக பயணம் செல்லக்கூடிய பொருளை கண்டுபிடித்து இருக்கிறார்களாம். ஒளியை விட வேகமாக எதுவும் எல்ல முடியாது என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கொள்கை தவறாகி விட்டதாம் ..
இதுதான் அந்த கண்டுபிடிப்பு.

எப்படி இதை செய்தார்கள்?

நியூட்ரினோக்கள் என்ற பொருட்களை ஜெனிவாவில் உருவாக்கினார்கள்.. இவற்றை இத்தாலியில் இருக்கும் ஒரு இடத்துக்கு அனுப்பி வைத்தார்கள்..இது அங்கு செல்ல எடுத்து கொண்ட நேரம், ஒளி அங்கு செல்ல எடுத்து கொண்ட நேரத்தை விட குறைவாக இருந்தது.

அதாவது ஒளியை விட விரைவான பொருள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது..

ஒளியை விட விரைவான பொருள் இருக்க முடிந்தால், கடந்த காலத்துக்கு செல்லுதல் போன்ற வினோதமான செயல்களும் சாத்தியம்தான் என்பது அறிவியல்... ( இது எப்படி என்பதற்கு , முந்தைய பதிவுகளை பார்க்கவும் )


நாங்கள் பல முறை ஆராய்ந்து இந்த முடிவை அறிவிக்கிறோம்... தவறாக அறிவித்து அசிங்கப்படக்கூடாது என்பதற்காக முயற்சி எடுத்து இதை செய்து இருக்கிறோம்... யார் வேண்டுமானாலும் சோதித்து பார்த்து கொள்ளுங்கள் என்கிரன்றனர் இதை நடத்திய விஞ்ஞானிகள்..

இதை தகுந்த சோத்னைக்கு உட்படுத்திய பின்பே அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள்... அப்படி அதிகாரபூர்வமாக அறிவித்தால், நமது நம்பிக்கைகள், கருத்துக்கள், செயல்-விளைவு தத்துவம், என எல்லாமும் மாறிவிடும்..

இது ஒரு புறம் இருக்க, இது தவறாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது...

எப்படி?

1 செல்லும் ஊடகத்தை பொறுத்து, ஒளியின் வேகம் லேசாக மாறுபடக்கூடும்.. ஆனால் நியூட்ரினோக்கள் சீரான வேகத்தில் செல்லும்... ஊடகம், ஒளியின் வேகத்தை குறைத்து இருக்க கூடும்..

2. சோதனை நடந்த அந்த இத்தாலி பிரதேசத்தில், சமீபத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது.. எனவே அவர்களின் தூர கணக்கீடு தவறாக போய் இருக்கலாம்.. வேகம் = தூரம் / நேரம்.. தூரம் தவறு என்றால் வேகம் தவறாக கண்க்கில் வரும்..

3 எத்தனையோ நட்சத்திரங்களை ஆராய்கிறார்கள்..எரி நட்சதிரங்களை , தன் ஒளியை வைத்து அறிகிறர்கள்...ஒளியை விட சீக்கிரமா எதுவும் வந்து அடைந்ததாக சரித்திரம் இல்லை

4

இபப்டி பல சந்தேகங்களும் இருக்கின்றன...

என்னதான் நடக்க போகிறது என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்..

http://blackinspire.blogspot.com



  • http://blackinspire.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger