Friday 23 September 2011

ஆஸ்கர் விருதுப் -எந்திரன் நிராகரிப்பு- மலையாளப் படம் தேர்வு!

 
 
 
 
 
சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு இந்த முறை மலையாளப் படம் ஒன்று அனுப்பப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்ற எந்திரன், தெய்வத்திருமகள் உள்ளிட்ட 5 தமிழ்ப் படங்களும் தேர்வாகவில்லை.
 
எடிட்டர் பி.லெனினைத் தலைவராகக் கொண்ட 14 பேர் கொண்ட குழு இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு அனுப்பப்படும் படத்தைத் தேர்வு செய்ய நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த கங்கை அமரன், ஏ.எஸ்.பிரகாசம் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர்.
 
இந்தக் குழுவினர் எந்திரன், தெய்வத்திருமகள், கோ, ஆடுகளம், முரண் ஆகிய ஐந்து தமிழ்ப் படங்கள் உள்பட 16 படங்களைப் பரிசீலித்தனர். இறுதியில் மலையாளத்தில் வெளியான ஆதாமிண்டே மகன் அபு படம் தேர்வானது.
 
இந்தப் படத்தில் நாயகனாக நடித்த சலீம் சிறந்த தேசிய நடிகராக தேர்வு பெற்று, தனுஷுடன் சேர்த்து விருதளித்துக் கெளரவிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger