Thursday 29 December 2011

ரஜினியை விட காங்கிரசாரிடம் தான் அதிக கறுப்பு பணம் உள்ளது- இல. கணேசன்

 
 
 
இந்தியாவிலேயே காங்கிரஸ் கட்சியினர்தான் அதிக கறுப்பு பணம் வைத்திருக்கின்றனர் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.
 
ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம் கறுப்பு பணத்தால் கட்டப்பட்டது என்று ஈவிகேஸ் இளங்கோவன் தெரிவித்த கருத்துக்கு அவர் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
 
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பவர்களுக்காக ரஜினிகாந்த் தனது திருமண மண்டபத்தை இலவசமாக அளித்திருந்தார். இது கருத்து தெரிவித்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்,
 
'அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்து வரும் ராகவேந்திரா திருமண மண்டபம் கறுப்பு பணத்தால் கட்டப்பட்டது'' என கூறியிருந்தார். அவரது கருத்துக்கு பதிலடி தரும் வகையில் தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பேசியுள்ளார்.
 
புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்துக் கூறுகையில்,
 
ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்துக்கு இலவசமாக மண்டபம் வழங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த் தான் நிறைய கறுப்புப் பணம் வைத்துள்ளார் என, காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது பற்றி, ரஜினிகாந்த் தான் முடிவெடுக்க வேண்டும்.
 
காங்கிசாரிடம் அதிக கருப்பு பணம்
 
அதேசமயம், இளங்கோவன் இருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சி தான், மத்தியில் ஆட்சி நடத்துகிறது.
 
கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, "அவர் வைத்திருக்கிறார், இவர் வைத்திருக்கிறார்' என, இளங்கோவன் புலம்புவது ஏன்? காரணம், காங்கிரஸ்காரர்கள் தான், நாட்டிலேயே அதிக கறுப்புப் பணம் வைத்துள்ளனர். அதனால் தான், தங்களிடம் முதலீடு செய்திருப்போரின் பட்டியலை வெளியிட சுவிஸ் வங்கிகளே தயாராக உள்ளபோதும், காங்கிரஸ் அரசு தயங்குகிறது என்றார் அவர்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger