Tuesday 29 November 2011

டிசம்பரில் , இலக்கியத்துக்கு குர��� பூஜை - பிரேக்கிங் நியூஸ்



மாதா , பிதா , குரு அதன் பின் தெய்வம் என்பது இந்திய மரபு.

ஆனால் ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் ஐரோப்பிய பாதிப்பில் அந்த நிலை இன்று மாறி விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ஆசிரியர்கள் என்றால் மாணவர்களுக்கு ஒரு மரியாதை இருக்கும் நிலை இருந்தது . இன்று ஆசிரியர் என்பது ஒரு பணியாளர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களும் முன்பு போல அளவு கடந்த உரிமை , அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. தன் பணியை முடித்தோமா சென்றோமா என இருக்க பழகிக்கொண்டு விட்டனர்.


இப்படி நாம் மறந்து போனவை ஏராளம்.

ஆங்கிலேயர் வரவால், இப்படி  நாம் மறந்து போன பலவற்றை   நமக்கு அறிமுகப்படுத்தும் நாவலை எழுதி முடித்துள்ளார் இறைவன் நமக்களித்த இதயக்கனியான அல்ட்டிமேட் ரைட்டர் சாரு அவர்கள்.

இது சுய முன்னேற்ற் நூலா, ஆன்மிக் பெட்டகமா , இலக்கிய கருத்துக்களை சுமந்து வரும் ஒட்டகமா,  இலக்கியத்தின் உச்சமா, இறைவன்  நமக்களிக்க மறந்த உன்னதங்களின் மிச்சமா , நவீன எழுத்தை தமிழுக்கு கொண்டு வரும் ஒப்ப்ற்ற முயற்சியா என்பதை எல்லாம் என்னால் மதிப்பிட முடியாது. ஆன்றோர்களும் சான்றோர்களும்தான் மதிப்பிட முடியும்.

     இலக்கிய உலகின் இறைவனான சாருவுக்கு  நம்மால் எந்த கைமாறும் செய்ய இயலாது.  ஆனால் நம் அவர் மேல் வைத்து இருக்கும் மரியாதையை எந்த வகையிலாவது காட்டியாக வேண்டும்.

அவர் மேல் நாம் காட்டும் மரியாதை சாரு என்ற தனி நபர் மேல் காட்டும் மரியாதை அன்று.

அவருக்கு செலுத்தும் மரியாதை , தமிழுக்கு செலுத்தப்படும் மரியாதை, இலக்கியத்துக்கு செலுத்தப்படும் மரியாதை, நம் பண்பாடுகளுக்கு செலுத்தப்படும் மரியாதை

ஏன் அப்படி சொல்கிறேன்? விளக்குகிறேன்

 நம் ஊரில் அறிவு ஜீவி என பெயர் எடுக்க சில டெம்ப்ளேட் ஃபார்முலாக்கள் உள்ளன.


  • தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொள்வது
  • வாசகனை மதிக்காமல் இருப்பது
  • எதையும் படிக்காத அறிவிலியாக இருந்து கொண்டு , தமிழ் கலாச்சாரம் என உதார் விடுவது
  • உலக இலக்கியம் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் , மேம்போக்காக பழம் பெருமை பேசுவது 
  • ஆளும் கட்சி எது செய்தாலும் திட்டுவது

அல்ட்டிமேட் ரைட்டர் இது எதையும் செய்வதில்லை

தன் எழுத்தால், தன் அறிவால், தன் உழைப்பால் மட்டுமே மக்கள் மனதில் நிற்கிறார். அவர் உழைப்பு , தமிழ் ஆளுமை , உலக இலக்கிய ஞானம் எல்லாம் போற்றத்தக்கது. வணங்கத்தக்கது..

 நாம் எதை வணங்குகிறோமோ, அந்த குண்ங்கள் நம்மிடமும் வளரும் என்பது மனோதத்துவ உண்மை

அந்த அடிப்படயில், எழுத்துலக விடி வெள்ளி சாருவின் பிறந்த நாளான டிசம்பர் 18 ல்   குரு பூஜை செய்ய இருக்கிறோம்

ஆன்மிக மரபு சார்ந்த பூஜையாக இது இருக்கும்

இது குறித்த மேலதிக விபரங்கள் , அடுத்த பதிவில்...







http://tamil-vaanam.blogspot.com




  • http://blackinspire.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger