Wednesday 5 October 2011

'மிஷினுக்கும் கூட ஒரு வாசம் உண்டு' - வைரமுத்துவின் ஆயுத பூஜை பாட்டு

 
 
 
 
 
கிருஷ்ணவேணி பஞ்சாலை திரைப்படத்தில் ஆயுத பூஜைக்காத கவிஞர் வைரமுத்து ஒரு பாடல் எழுதியுள்ளார்.
 
அந்தப் பாடல், இனி வரும் ஆயுத பூஜைகளில் பிரதான இடம்பெறும் எனும் அளவுக்கு சிறப்பாக அமைந்துள்ளது.
 
ஏஆர் ரஹ்நந்தன் இசையமைத்துள்ள பாடல் இது:
 
பல்லவி
 
ஆலைக்காரி
பஞ்சாலைக்காரி
ஆலைக்காரி
பஞ்சாலைக்காரி
கல்லில் உள்ள சிலைகள் எல்லாம்
உங்கள் சாமி - நூல்
மில்லில் உள்ள எந்திரம் எல்லாம்
எங்கள் சாமி
இதயம் போடும் ஓசைதான் - நம்
உயிரின் சங்கீதம்
எந்திரம் போடும் ஓசைதான்
தொழிலாளியின் சங்கீதம்
இந்த ஆலை என்பது ஆலை அல்ல
ஆலயந்தான்
பூஜைபோடு - ஆயுத
பூஜைபோடு
தொழிலாளி வாழ்க - என்னும்
ஆசையோடு
 
சரணம் - 1
 
பெத்த மண்ணை வித்துத் தின்னு
இத்துப் போயி வந்தோம்
பெத்த தாயப் போல நீயே உப்புப் போட்டாயே!
தனித் தனியா நூலா வந்தோம்
துணியா இங்கே ஆனோம்!
மானங் காக்கும் வேலை தந்து
மானங் காத்தாயே
பலசாதிப் பறவை
ஒருகாட்டில் குடியேறும்
அதுபோல நாங்கள் உறவானோம் இங்கே
ஆயுத பூஜை என்பது கூட
மேதினம் போலத்தான்
ஆயுதம் மேலே குங்குமம் வைத்தோம்
செந்நிறம் காணத்தான்
இந்த ஆலை என்பது ஆலை அல்ல
ஆலயந்தான்!
 
சரணம் - 2
 
சொந்தம் உள்ள சாதிசனம்
தூரமாகிப் போக
வந்த சனம் சொந்தம் என்னும்
பந்தம் உண்டாச்சே
முள்ளுக்குள்ள வாழ்ந்த வாழ்க்கை
முற்றும் தீர்ந்து போச்சு
மில்லுக்குள்ள வந்தோம்
பஞ்சம் போயே போயாச்சு
மனுசங்க வேர்வை
ஒருவாசம் உண்டாக்கும்
மிஷினுக்கும் கூட
ஒரு வாசம் உண்டு
பஞ்சைக் கொண்டு நூலைக் கண்டோம்
பஞ்சம் போனதுகாண்! - எங்கள்
காலம் வெல்லும் என்னும் கனவு
கண்ணில் தோணுதுகாண்
இந்த ஆலை என்பது ஆலை அல்ல
ஆலயம்தான்!
 
ஒரு பஞ்சாலையை மையப்படுத்தி தனபால் பத்மநாபன் இயக்கியுள்ள இந்தப் படத்தை மின்வெளி மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு நல்ல சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.
 
 


0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger