Tuesday 20 December 2011

கேரளம் நோக்கிச் ���ெல்லும் சாலைகளில் முற்றுகைப் போ���ாட்டம்: பழ. நெடுமாறன் அறிவிப்பு



முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை மதிக்க கேரளம் மறுப்பதையும் புதிய அணை கட்டவேண்டும் என பிடிவாதமாக கேரளம் வற்புறுத்துவதையும் கண்டிக்கும் வகையில் தமிழகத்திலிருந்து கேரளம் நோக்கிச் செல்லும் 13 சாலைகளிலும் எந்தப் பொருளையும் கொண்டுச்செல்லாமல் தடுக்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் நாள் காலை 10 மணிக்கு இந்த முற்றுகைப் போராட்டம் 13 சாலைகளிலும் நடைபெறும். கம்பம் லோயர் கேம்ப் பகுதியில் நடைபெறும் முற்றுகைப் போராட்டத்தில் வைகோ அவர்களும் கலந்துகொள்ளுகிறோம். முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும் தோழர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

அறவழியில் நடத்தப்படும் இப்போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும்படி மக்களை வேண்டிக்கொள்கிறேன்.

என பழநெடுமாறன் அவர்கள் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


http://actressmasaala.blogspot.com



  • http://tamil-friend.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger