Tuesday 20 December 2011

ஜெயலலிதாவுடன் நிரூபமா ராவ் திடீர் சந்திப்பு-ஏன்?

 
முதல்வர் ஜெயலலிதாவை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தூதராக பணியாற்றியவர் நிரூபமா ராவ். பின்னர் மத்திய வெளியுறவுத்துறை செயலாளராகவும் பணியாற்றினார். தற்போது அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இவர் பொறுப்பு வகிக்கிறார்.
 
இந்த நிலையில் சென்னை வந்த நிரூபமா ராவ் திடீரென முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை. இருப்பினும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ராவ் தெரிவித்தார்.
 
நிரூபமா ராவின் பூர்வீகம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger