Tuesday 20 December 2011

விபத்தில் முன்னாள் மந்திரி மகன் உள்பட 3 பேர் பலி

 
 
ஆந்திரா மாநில முன்னாள் மந்திரி கோமத்ரெட்டி வெங்கட் ரெட்டி. தனி தெலுங்கானா மாநிலத்துக்காக மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர். தற்போது எம்.எல்.ஏ.வாக மட்டும் உள்ளார்.
 
இவரது மகன் பிரதீக் ரெட்டி. தனது நண்பர்கள் சுனீத்ரெட்டி, சந்திரா ரெட்டி, அரவ ரெட்டி ஆகியோருடன் இன்று ஒரு காரில் சென்றார். ஐதராபாத் நகர வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் கூட்டமாக வந்த ஆட்டு மந்தை மீது மோதாமல் இருக்க பிரதீக் ரெட்டி காரை திருப்பினார்.
 
அப்போது கார் நிலைதடுமாறி, சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அரவ ரெட்டி தவிர மற்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger