Wednesday 12 October 2011

2ஜி வழக்கு : நீதிமன்றத்தின் நேரங்களை வீணடிக்காதீர்கள் : சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

 
 
 
உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் 2ஜி ஸ்பெக்டரம் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 10-ந்தேதி மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், முதலீட்டாளர்களை சிறையில் அடைத்துவிட்டால் முதலீடுகள் வருமா? இதன்மூலம் இந்தியாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என கூறியிருந்தார்.
 
அமைச்சர் சல்மான் குர்ஷித்-ன் இக்கருத்துக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிபிஐயிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு சிபிஐ அமைச்சரின் பேச்சுக்கு தாங்கள் எந்தவித ஆதரவும் தெரிவிக்கவில்லை என்று கூறியது. மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதுபோன்ற கருத்துக்களால் நீதிமன்றத்தின் நேரங்களை வீணடிக்காதீர்கள் என்று சிபிஐ-க்கு கண்டனம் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் கனிமொழி ஜாமீன் மனு மீது சிபிஐ எந்தவித எதிர்ப்பும் கூறவில்லை என்ற செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது சிபிஐ.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger